செவ்வாய், 9 அக்டோபர், 2012

திருமாவுக்கு அமைச்சர் பதவி கேட்டாரா ரவிக்குமார்?

அண்ணன் ரவிக்குமார் அவர்களின் பேச்சு :
---------------------------------------------------------------
2, 3 நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகை ஆசிரியர் என்னுடன் பேசினார். அவர் பேசும்போது, மத்திய மந்திரிசபையில் மாற்றம் நடைபெற உள்ளதே. அதில் உங்கள் தலைவருக்கு மந்திரி பதவி வாய்ப்பு வழங்கப்பட்டால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டார். அதற்கு நான், தி.மு.க. மந்திரிசபையில் இடம் பெறுவதில்லை என்று கூறியுள்ளது. ஆனால் நாங்கள் ஒரே உறுப்பினர் தான் உள்ளோம். எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா என்று தெரியவில்லை என்று கூறினேன். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒரே தலித் கட்சி நீங்கள் தானே அந்த வகையில் அந்த வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படலாம் அல்லவா என்று அவர் சொன்னார். காங்கிரசிற்கு நாங்கள் ஆதரவு அளிப்பதால் தான் ஆட்சி நடக்கிறது. நாங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற மன பிரம்மை எங்களுக்கு இல்லை என்று நான் கூறினேன். ஒரு நபர் என்று பார்க்காதீர்கள், ஒரே ஒரு உறுப்பினரை கொண்ட வாழப்பாடி ராமமூர்த்தி தான் பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்தார்
 என்றார் அவர்.

எங்களை பொறுத்தவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மட்டுமல்ல, பாராளுமன்றத்திலேயே இடம் பெற்றுள்ள ஒரே தலித் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். இதனை காங்கிரஸ் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை.

மந்திரி பதவி வேண்டும் என்றும் நாங்கள் கேட்கவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக உள்ள எங்களது சமூகத்திற்காக உரிமையைத்தான் கேட்கிறோம். தனியார் துறையிலும், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. அந்த மசோதா இன்னமும் சட்டவடிவம் பெறவில்லை. இவற்றை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு முன்வர வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அப்படி செய்தால் முலாயம்சிங் கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் பெற்றாலும் மயாவதியின் ஆதரவு உள்ளது. இதனால் ஒரு வேளை ஆட்சியை இழந்தால் கூட இந்தியா முழுவதும் உள்ள தலித் மக்கள் உங்களை பெரும்பான்மையாக ஆட்சியில் அமர வைப்பார்கள்.
-------------------------------------------------------------------------------
திருமாவுக்கு அமைச்சர் பதவி கேட்டாரா?

தனியார் துறையிலும், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது எங்களது சமூகத்திற்கான உரிமை. அதைத்தான் நாங்கள் கேட்கிறோம், அதை நிறைவேற்றும் பட்சத்தில் அரசுக்கு சிக்கல் ஏதும் வந்தால், முலாயம்சிங் கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் பெற்றாலும் மயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவு உள்ளது. அந்த சட்டத்தை நிறைவேற்றினால் மாயாவதி அவர்கள் ஆதரவு தருவார்கள். அதையும் தாண்டி ஆட்சி கவிழ்ந்தால் அந்த சட்டத்தை நிறைவேற்றினால், அதற்காகவே இந்தியா முழுவதும் உள்ள தலித் மக்கள் உங்களை பெரும்பான்மையாக ஆட்சியில் அமர வைப்பார்கள் என்ற பொருள்படத்தான் அவர் பேசியிருக்கிறார். ஆனால் சில ஊடகங்கள் முட்டாள்தனமாக திருமாவுக்கு அமைச்சர் பதவி கேட்டதாகவும், அமைச்சர் பதவி கேட்பது எங்கள் உரிமை என்று அவர் பேசியதாகவும் செய்தி வெளியிட்டு உள்ளனர். காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலித் கட்சி என்ற அடிப்படையிலும் தலித் மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் தனியார் துறையிலும், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வேண்டும் கேட்டிருக்கிறார்.

இதில் என்ன தவறு இருக்கிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக