வியாழன், 11 அக்டோபர், 2012

சமூக நல்லிணக்கத்திற்கான வழிகாட்டி இசுலாமியம் !



தந்தை பெரியார் அவர்களை போற்றக்கூடிய நான், அவர் வழியில் நின்றுக் கொண்டிருக்கும் நான்,  சாதி, மதத்தின் பெயரால் மானுடம் நசுக்கப்படுகிறது என்று மூர்க்கமாக முழங்குகின்ற நான், சாதியும், ஆதிக்கமும், அடக்குமுறையும், உருவாக மூலக்காரணி, மதம்; அந்த மதத்தின் வித்துக் கடவுள், அவன் ஒரு அயோக்கியன், சமூகநீதி தவறியவன், பாரபட்சம் மிகுந்தவன் என்று அழுத்தமாக பேசுகின்ற நான் இசுலாமியத்தை மதிப்பதும், நபிகள் நாயகம் அவர்களை பின்பற்றவேண்டும் என்று விரும்புவது கடவுள் மீது உள்ள பற்றினால் அல்ல; திருக்குர் ஆனில் சொல்லப்பட்டுள்ள சமூக  நல்லிணக்கத்திற்காக. இசுலாமியத்தைப் பற்றி பேசுகிற இதே வேளையில் கூட கடவுள் மறுப்பிலே உறுதியாக இருக்கிறேன். நாம் ஏன் கடவுளை மறுக்கிறோம் அல்லது எதிர்க்கிறோம்? கடவுள் இல்லை என்பதாலா? இல்லை இல்லை கடவுள் இருக்கிறார் என்பதற்கு எப்படி ஆதாரம் இல்லையோ அப்படியே கடவுள் இல்லை என்பதற்கும் ஆதாரம் இல்லை. இருந்தும் ஏன் கடவுளை எதிர்க்கிறோம். கடவுள் இருக்கட்டும் பத்திரமாக இருக்கட்டும், நலமாக இருக்கட்டும் நாட்டிலே கொலைக் கொள்ளை, கற்பழிப்பு, ஊழல், வறுமை இவை  எல்லாம் அன்றாட நிகழ்வாகி விட்டாலும் எந்தவித சலனமும் இல்லாமல் அவர் சந்தோஷமாக இருக்கட்டுமே. இசுலாமியம் கடவுளை உறுதியாக நம்புகிற மார்க்கம்; நான் கடவுளை சுத்தமாக நம்பாத நாத்திகன் ; இப்படி முரண்பாட்டோடு இசுலாமியத்தை ஏன் ஆதரிக்கவேண்டும்?

ஒரு பிராமிணனை பார்த்தால் ஒரு தாழ்த்தப்பட்டவன் கும்பிடுறேன் சாமி என்று சொல்லவேண்டும்; அவன் பதிலுக்கு என்ன சொல்வான் தேவிடியாள் மகனே என்று சமஸ்கிருதத்திலே சொல்வான் இதுதான் இந்துமதம். ஆனால்  இசுலாமியம்  என்ன சொல்கிறது. அன்பும், அமைதியும் தழைத்தோங்க வேண்டும்; உலகில் சாந்தியும் சமாதானமும் உருவாக வேண்டும், அதற்க்கு தனிமனித வழிபாட்டை தவிர்க்க வேண்டும். ஆதிக்கம் நிலவ, அடிமைத்தனம் உருவாக, வன்முறை உருவாக வர்க்கப்பேதம் நிலவ, ஆணாதிக்கம் மேலோங்க சாதி சண்டை உருவாக மூலக்காரணம் என்னவென்று , இதற்க்கெல்லாம் வித்து எங்கே இருக்கிறது என்று ஆராய்வோமானால் தனிமனித துதிபாடல் எனும் தனி மனித வழிபாடே ஆகும். அதைத்தான் தவிர்க்கிறது இசுலாமியம், தனிமனித வழிபாட்டை பெரும் பாவசெயளாக கருதுகிறது. இன்றியமையாத கொள்கையாக பிரகடனப்படுத்துகிறது.1400 ஆண்டுகள் முன்பாக வாழ்ந்த நபிகள் நாயகம் அவர்கள் கடுமையாக இதை வலியிருத்தினார். அதனால் இசுலாமியத்திர்க்குள்   எத்தனைப் பிரிவுகள் இருந்தாலும் யாருக்கும் நபிகள் அவர்களுக்கு ஒரு சிலை வைக்கவேண்டும் என்ற என்னம் கூட வரவில்லை. கருணாநிதி வாழ்க, ஜெயலலிதா வாழ்க என்று கோஷம் போடும் இந்த சமகாலத்தில்  கூட யாரும் நபிகள் நாயகம் வாழ்க, காயிதே மில்லத் வாழ்க என்று கோஷம் போடுவதில்லை, ஏன் இந்துமதத்திலும், கிருத்துவ மதத்திலும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தவில்லையா? என்று கேட்டால் எல்லா மதங்களும் சமூக  நல்லிணக்கத்தை  வலியுரித்துக்கின்றன. ஆனால் சமூக நல்லிணக்கம் சீர்குலைய என்ன காரணம்? போட்டிப் பொறாமை, ஆதிக்க எண்ணம் இவைதான். இவை எங்கே தொடங்குகின்றன. ஒருவன் தன்னை முன்னிலைப் படுத்தத் துடிக்கும் போது  தன்னை வாழ்த்தி அல்லது வணங்கிகொள்ள ஒருக் கூட்டத்தை  சேர்க்கிறான், அந்தக்கூட்டம் அவனக் கொடுக்கும் அர்ப்பக் காசுக்காக கூழைக் கும்பிடைப் போட்டுக் கொண்டு அடிமையாக அவனிடம் சரணடைகிறான். இதை தவிர்க்க அல்லது முறியடிக்க தான் இசுலாமியம் தனிமனித வழிபாட்டை தடை செய்கிறது.

கவுதம புத்தர் என்ன சொன்னார்? அவர் கடவுளைப் பற்றியே சொல்லவில்லையே. இயேசுநாதர் என்ன சொன்னார் தன்னை அவர் இறைத்தூதர் என்றுதானே சொல்லியிருக்கிறார். கவுதமப்புத்தர் ஒரேக் கடவுள் என்றும் சொல்லவில்லை; ஓராயிரம் கடவுள் என்றும் சொல்லவில்லை; ஆனால் உலகிலேயே அதிக சிலை நிறுவப்பட்டது. கவுதமப்புத்தருக்குத்தான். கவுதமப்புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று இந்துமயமாக்கியதால் இன்று ஒன்னரை லட்சம் அப்பாவிமக்களை கொன்று குவித்த படுபாதக கொலைவெறி மதம் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளது பவுத்தம். கவுதமப்புத்தர் காட்டிய தனிமனித ஒழுக்கத்தை பின்பற்றியிருந்தால் இவ்வளவுப் பெரிய அழிவு நிகழ்ந்து இருக்குமா?

உலகில் சமத்துவத்தை விரும்புபவர்கள் ஆதிக்கத்தை எதிர்ப்பார்கள்; ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் அடக்குமுறையை கண்டிப்பார்கள்; அடக்குமுறையை கண்டிப்பவர்கள் தனிமனித துதிபாடலை நிச்சயமாக எதிர்ப்பார்கள்.இசுலாமியம் மிகப்பெரிய பாவசெயளாக எதை பட்டியல் எடுக்கிறது எண்டு பாருங்கள் : இணைக் கற்ப்பித்தல், தனிமனித வழிபாடு, விபச்சாரம், கொலை, குழந்தைகளை கொலைசெய்தல், வாக்குறுதி மீறல், சாட்சியத்தை மறைத்தல், லஞ்சம், நல்வழியை தடுப்பது, மது, சூதாட்டம், பெண்களின் உரிமையைப் பறிப்பது, வட்டிக்கு பணம்   கொடுத்தல், பிறர் பொருட்களை அபகரித்தல், சோதிடம், திருட்டு, விளைப்பொருட்களை அழித்தல், குழப்பம் செய்தல், பெற்றோரை துன்புறுத்தல், அவதூறுப் பரப்பல், போன்றவற்றை பெரும் பாவசெயளாக பிரகடப்படுத்துகிறது. இதற்காக இசுலாமியத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதில்லை, அது சொல்லும் கொட்ப்பாடுகளை பின்பற்றினாலே உலகில் அன்பும் அறனும், சகோதரத்துவமும் தழைத்தோங்கும். மேலும் சமூக நல்லிணக்கத்தை விரும்பும் ஒவ்வொருவரும் மானுடத்தை விரும்புவார்கள். இதை திருக்குர் - ஆன் . இப்படி சொல்கிறது. : 

மனிதர்களே ! உங்களை ஒரு ஆண், பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்வதற்காகவே உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் படைத்தோம் -( திருக்குர் - ஆன் : 49 : 13)

அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து அல்லது தத்துவம் தான் இது. அது கடவுள் படைத்ததோ, அல்லது இயற்க்கை பரிணாம வளர்ச்சியோ  அதைப் பற்றி நமக்கு கவலையில்லை. கருத்து எற்றுக்கொள்ளகூடியது தானே. உதாரணமாக தமிழகத்தில் 7 கோடி மக்கள் இருக்கிறார்கள், ஒருக் குடும்பத்திற்கு  சராசரியாக 4 பேர் வீதம் என்றால், தமிழகத்தில் முதன் முதலில் 1 கோடியே 75 லட்சம் பேரா பிறந்தார்கள்? எல்லோரும் ஒரு ஆண், ஒரு ஆனில் இருந்தே பிறந்து இருக்க முடியும். மார்க்சிய விதி என்ன சொல்கிறது ஒன்றில் இருந்து தான் மற்றொன்று பிறக்கும் எதவும் தானாக பிறந்துவிடாது. ஆக ஒரு ஆண், ஒரு பெண்ணில் இருந்து பிறந்த நமக்குள் எப்படி வந்தது சாதி, மதம்.? சிந்தித்துப் பாருங்கள்...

கவுதமப் புத்தரின் கோட்ப்பாடும் , மார்க்சிய விதியும் என்ன சொல்கிறது " தனிமனித விடுதலையின் மூலமே சமூக விடுதலை அடைய முடியும். என்று வலிமையாக பிரகடனப்படுத்துகின்றன. அந்த வகையில் பார்ப்போமானால் எப்படி தனிமனித விடுதலையின் மூலம் சமூக விடுதலைப் பெற முடியுமோ அப்படித்தானே தனிமனித சீர்கேட்டின் மூலம் சமூக சீர்கேடு உருவாகிறது. சமூக சீர்கேட்டை தடுக்க தனிமனித சீர்கேட்டை தடுக்கவேண்டும்; தனிமனித சீர்கேட்டை தடுக்க தனிமனித வழிபாட்டை தடுக்கவேண்டும். அதைத்தானே இசுலாமியம் வலியிருத்துகிறது. மேலும் இந்துமதம் என்ன சொல்கிறது. ராமன் பிறக்கும் பொது பூமியில் வசந்தம் உண்டானது. மரங்கள் எல்லாம் ஆடின. வைகுண்டத்தில் மாற்றம் நிகழ்ந்தது; கிறிஸ்துவம் என்ன சொல்கிறது இயேசுநாதர் பிறக்கும்போது வானில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் ஜெருசிலம் நோக்கி சென்றன. அவர் பிறந்த மாட்டுத்தொழுவத்தில் சூரிய ஒளி வந்தது. அவர் இறந்த மூன்றால் நாள் உயிர்த்தெழுந்தார். என்று சொல்கிறது. இதை எல்லாவற்றையும் இசுலாமியம் புறக்கணிக்கிறது. பிறப்பையும் இறப்பையும் சாதாரண நிகழ்வாகவே கருதுகிறது.எப்போது ஒருவன் தன பிறப்பை பிரமாண்டப் படுத்தவேண்டும் என்று நினைக்கிறானோ அப்பொழுதே அவனுக்குள் ஆதிக்க எண்ணம் உருவாகிவிடுகிறது.

தன்னோடு வாழும் சகமனிதனை சாதியாக பிரித்துவைத்து உயர்வு தாழ்வு கர்ப்பிக்கவே இந்துமதம் உருவாக்கப்பட்டது.மனுதர்மம் எனும் தீரக்கருமத்தை படைத்தார்கள். கிருஸ்துவ மதம் என்ன சொல்கிறது நீ எப்படிப்பட்டவனாகவும் இருந்துக்கொள், என்ன சாதியாகவும் இருந்துக்கொள் ஆனால் கிருச்த்துவனாக இரு என்கிறது. ஆனால் அங்கே தலித் கிருத்துவர், கிருத்துவ நாடார், என்ற பாகுபாடெல்லாம் இருக்கிறது. தனித்தனி சுடுகாடு முறையும் அந்த மதத்தில் தான் இருக்கிறது.ஆனால் இசுலாமியத்தில் மட்டும் தான் நீ எவ்வளவுப் பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், அன்றாட பிழைப்புக்கே அள்ளப்படும் பாமரனாக இருந்தாலும் அவன் இசுலாமியன் என்ற ஒற்றை அடையாளம் தான். ஊரிலே தேரோட்டம் நடைபெறும் அப்பொழுது கடைசியாக அந்த ஏரியா  கவுன்சிலர் வருவார் அவர் வந்தவுடன் மக்கள் எல்லாம் வழிவிடுவார்கள் அவர் மட்டும் முன்னே சென்று அம்மனை தரிசிப்பார் இது இந்துமதத்தில். ஆனால் இசுலாமியத்தில் தொழுகையில் தோழர்கள் இருக்கும் பட்சத்தில் அந்த நாட்டின் மன்னரே வந்தாலும் அவர் கடைசியாக நிற்கவேண்டும். அகே யாரும் உயர்ந்தவர் அல்ல. யாரும் தாழ்ந்தவர் அல்ல. இதை வலியுறுத்தி வாழ்ந்துக் காட்டியவர் தான் நபிகள்.  மானுட சமூகத்திற்கே அன்பையும் அமைதியையும் போதித்தவர். அவர் வாழ்ந்த காலத்திலேயே தன அத்துனை சொத்துக்களையும் விட்டுவிட்டு மதீனா நோக்கி சென்றவர். இன்று நாம் யாரவது நாம் செய்வோமா? கடவுளை வழிபடுகிறேன் என்று சொல்லிவிட்டு மனைவிமக்களை வீதியில் விட்டுவிட்டு சென்றாலும் பாவசெயலாகவே கூறுகிறார்கள். உலகில் நடக்கும் அனைத்துக் குற்றங்களுக்கும் மூலக்காரனியே தனிமனித வழிபாடே அதை ஒழித்தால் ஒழிய நாட்டில் அன்பை நிலைநாட்டமுடியாது.

மனிதநேய வாதிகள் பின்பற்றவேண்டிய மார்க்கம் இசுலாமியமே என்றுக்கூறி முடிக்கிறேன் 
இசுலாமியத்தின் மீதான ஆய்வுகள் தொடரும்....

ஆய்வுக்கு உதவிய நூல் : (பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் மனிதனுக்கேற்ற மார்க்கம்)

மனிதநேயத்துடன்....
அங்கனூர் தமிழன்வேலு... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக