செவ்வாய், 9 அக்டோபர், 2012

ஏ ! அடிமை சமூகமே உனக்கு வெட்கமில்லையா?

ஏ ! அடிமை சமூகமே
உனக்கு வெட்கமில்லையா?
மானமில்லையா?
ஆண்டான் அடிமை
என்று அடங்கிக்கிடந்தாய்
ஆண்டாண்டாய் உன்னை
ஆளவைக்க வந்தவரின்
கைகளை ஆதரிக்க
மறந்தாய் ! இன்னும்
எத்தனை காலம்
இப்படி அடிமைப்பட்டே
கிடப்பாய்?

வரலாறு உன்னைப் பார்த்து
சிரிக்கிறது ! வாழ்க்கையோ
உன்னோடு வாழ மறுக்கிறது !
உன் பாட்டன் சானிப்பால்
குடித்தான்; அதனால் உனக்கு
மதிய உணவாய் மலத்தைக்
கொடுத்தான்; உனக்கு
மண்டியிட்டு, மானம் இழந்து
வாழக்கற்றுக் கொடுத்தது யாரடா?


அய்யா அழைத்தார் கொடிப்
பிடிக்க; ஓடினாய்,
கொடிப்பிடித்தாய்;
அம்மா அழைத்தார்
கோஷம் போட ஓடினாய்
கோஷம் போட்டாய்;
நம் அண்ணல் அழைத்தார்
ஆள வாடா; அதிகாரத்தைப்
பிடிடா என்றார் ! அப்போதும்
ஓடினாய்; காததூரம் ஓடினாய்
இன்று அவர்வழி வந்த
நம் அண்ணனும் அழைக்கிறார்
நாற்காலிக்கு ஆசைப்படு
என்கிறார்; மாட்டோம்; ஊருக்கு
ஓரமாயே வாழ்கிறோம் என்று
ஓடுகிறாய்; ஓடு ஓடு
ஓடிக் கொண்டே இரு
ஒருநாள் ஒட்டுத்துணிகூட
இல்லாமல் உன் உடல்
கூவத்தில் வீசப்படும் !!!

- அங்கனூர் தமிழன்வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக