வெள்ளி, 19 அக்டோபர், 2012

சாதி சொல்லும் நீதி !


கல்லில் சிலைவடித்து
கண்டதெல்லாம் கடவுளாக்கி
கடும் விஷமாம் சாதியமைத்து
கணக்கில்லாக் கொடுமைகளுக்கு
காரணமாம் வர்ணம் தீட்டி
கயநெறி சொன்னவர் எல்லாம்
நாட்டை ஆள திண்ணமாய்
வந்தானே!

காடு கரம்பெல்லாம் உழைத்து
கண்ணீரையும், செநீரையும் சிந்தி
கண்டத்தையே காக்கும் உழவன்
எல்லாம் தாழ்ந்தவனாம் ;
உழைத்து வாழ வக்கில்லாமல்
கடவுளிடம் பேசுவதாக கூறி
கண்டதையே பேசி காசு பார்க்கும்
சோம்பேறிகள் உயர்ந்தவனாம் !

கல்லுக்கு கற்பூரம் காட்ட ஒருசாதி !
கழிவறை சுத்தம் செய்ய ஒருசாதி !
செருப்பு தைக்க வேண்டுமாம் ஒருசாதி;
அந்த செருப்பை போட அவனுக்கு
உரிமையில்லையாம் அதுவும் சாதி !

கிணறு வெட்ட வேண்டுமாம் ஒருசாதி
அதிலே அவன் தண்ணீர் எடுத்தால்
தீட்டாம் அதுவும் சாதி !
ரோடு போட வேண்டுமாம் ஒருசாதி;
அந்த ரோட்டிலே அவன் நடந்தால்
காலை வெட்டுவேன் என்பானாம்
அதுவும் சாதி !

முகசவரம் செய்ய வேண்டுமாம் ஒருசாதி;
அவன் முகத்திலே விழித்தால்
தீட்டாம் அதுவும் சாதி !
வீதியெல்லாம் அபகரிப்பான் அது சமூகநீதி ?
அந்த வீதியை சுத்தம் செய்பவனிடம் மட்டும்
பார்ப்பானாம் சாதி ! இது என்னடா நீதி?

அரசனானாலும், ஆண்டியானாலும்
செத்தப்பின் நாறத்தான் செய்யும் பிணம்
அந்த பிணத்தை எரிப்பவனும், அந்த
பிணத்தை சுத்தம் செய்பவனும்
செத்தப்பின் சுடுகாடு செல்ல இல்லையே
ஒரு பொதுவீதி !

கழிவறை சுத்தம் செய்ய வேண்டுமாம் ஒருசாதி;
அவன் அருகிலே சென்றால் நாற்றம் எடுக்கும்
என்பானாம் இதுவும் சாதி !
நாற்று நடவேண்டுமாம் ஒருசாதி ;
அந்த நாற்று நடுபவன் எல்லாம்
நாதி அற்றவற்றவனாம் இதுவும் சாதி !

கறுத்த நெஞ்சம் கொண்டு ;
கல்லிலே கடவுள் கொண்டு;
கயநெறி ஊருக்கு சொல்லி;
கன்னக்கோல் உருவம் தைத்து;
உயர்ந்தவன் என்றும்; தாழ்ந்தவன்
என்றும் உபதேசம் சொல்லும்
இந்துத்துவத்திற்கு இதுதானே
நீதி.....

------------------------------
அங்கனூர் தமிழன்வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக