சனி, 21 ஜூலை, 2012

அண்ணன் சீமானுக்கு பதிலடி


விகடன் மேடையில் அண்ணன் சீமான் அளித்த பேட்டிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டனாக அல்லது திருமாவின் தம்பியாக பதில் சொல்லவேண்டிய கடமை எனக்கிருக்கிறது. அதனால் எனக்கு தெரிந்த நடையில் ஆடை அலங்காரம் இன்றி, எதுகை மோனையின்றி பதில் சொல்கிறேன்....

சீமான் : சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் அண்ணன் திருமாவளவன் தனித்து நின்றிருந்தாலே ஈழத்துயரத்தின் எதிரொலியும், எங்களோடு இயைந்தவர்களின் குரலும் அவரை அமோகமாக வெற்றி பெற செய்திருக்கும்.

தமிழன் வேலு : முதலில் அண்ணனுக்கு ஒன்றை சொல்கிறேன் தலைவர் திருமாவும் சரி, அவரது தம்பிகளாகிய நாங்களும் சரி, ஈழத்திற்கு நாங்கள் போராடுகிறோம், அதனால் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ஓட்டுப் பிச்சை எடுக்கும் பழக்கம் இல்லை என்பதையும், எழவு வீட்டில் களவு பார்க்கும் புத்தியும் எங்களுக்கு இல்லை என்பதையும் சொல்லிக் கொள்ளகிறேன்.

தி.மு.க. வேண்டாம், அ.தி.மு.க. வேண்டாம், காங்கிரஸ் வேண்டாம், பி.ஜே.பி வேண்டாம் என்று 1999லிருந்து அழைத்து கொண்டிருக்கிறார் திருமா. ஆனால் அதற்க்கு தமிழ்தேசிய சிந்தனையாளர்கள் அசைந்து கொடுத்தபாடில்லை. 1999 லும் 2004 லும் சிதம்பரம் தொகுதியில் தனித்து தான் களம் கண்டார். ஆனால் அங்கேயும் வந்து சாதியவாதிகள் தோற்க்கடித்தார்கள். 1999 யில் 2.25 லட்சம் வாக்குகள், 2004யில் 2.5லட்சம் வாக்குகள் பெற்றார். 2004யில் 2.5லட்சம் வாக்குகள் பெற்று தேசிய கட்சியான பிஜே.பியையும், தமிழகத்தின் பிரதான கட்சியான அதி.மு.க. வையும் டெபாசிட் இழக்க வைத்தார்.

ஊரெல்லாம் சுற்றிவந்து பொன்னுசாமிக்கு ஓட்டு கேட்டார்களே தவிர திருமாவளவனுக்கு ஒட்டு கேட்கவில்லை. பொன்னுசாமி வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு சென்று ஈழத்திற்காக பேசுவார் என்று நம்பினார்களே தவிர 25ஆண்டுகாலமாக திருமாவளவன் ஈழத்தை பற்றியே பேசிக்கொன்டிருக்கிறாரே இந்த தொகுதியில் திருமாவளவனை ஆதரிப்போம் என்று யாரும் முன்வரவில்லை.. 2009யில் தனித்து களம் கண்டிருந்தால் கூடுதலாக பத்தாயிரம் ஓட்டுக்கள் வாங்கியிருக்கலாமே தவிர வெற்றி பெற்று இருக்க முடியாது. அப்படி ஒரு நிலையில் கூட 2009யில் தனித்து களம் காண தான் முன்வந்தார். ஆனால் அவரை தாண்டி கட்சி உள்ளது. அவரது தலைமுறையை தாண்டியும் இந்த இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தை முன்னேடுக்கவேண்டியதன் அவசியம் இருக்கிறது. தொடர் தோல்விகளால் தலைமை வேண்டுமானால் சோர்வடையாமல் இருக்கலாம் ஆனால் கடைநிலை தொண்டர்கள் சோர்ந்து போவார்கள் இயக்கம் உடைந்து போகும். எனவே ஏதாவது ஒரு அணியில் இணைந்து களம் காண வேண்டியதன் அவசியம் ஏற்ப்பட்டது. அ.தி.மு.க.வுடன் கொள்கை ரீதியாகவோ, தொகுதி உடன்பாட்டின் படியே கூட்டணி சேர வாய்ப்பில்லாத நிலையில் தனித்து களம் காணுவது இயக்கத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதாலும் தி.மு.க. கூட்டணியில் இணைந்து களம் காண வேண்டியதன் நிலை ஏற்ப்பட்டது.

சீமான்: திராவிட தலைமைகளை வீழ்த்த வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததே அண்ணன் திருமா தான்.. அண்ணன் திருமா அவர்களே நான் பேசும் அனைத்தும் நீங்கள் சொல்லிக்கொடுத்த பாடங்களே நான் வேறு எங்கும் கற்றுவரவில்லை.

தமிழன் வேலு :இந்த கேள்விக்கும் அண்ணன் சீமானே பதில் சொல்லி இருக்கிறார்.  இந்துமயமாகிவிட்ட திராவிட கட்சிகள் என்றபோர்வையில் உள்ள ஓட்டுப் பொருக்கி அரசியல் கட்சிகளை வீழ்த்துங்கள் என்று சொல்லிக் கொடுத்தாரே ஒழிய எங்கள் பாட்டன் காட்டிய திராவிடக் கொள்கைகளை வீழ்த்துங்கள் என்று சொல்லித்தரவில்லை   அண்ணன் சீமான் அவர்களே திராவிடம் என்பது பெரியார் என்ற கன்னடரின் புதிய கண்டுபிடிப்பு அல்ல. எங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் சித்தாந்தம், திராவிடம் என்பது அண்ணாதுரை, கருணாநிதி, வைகோ என்ற தெலுங்கர்களின் வெற்று முழக்கம் அல்ல. எங்கள் பாட்டன் அயோத்திதாசரின் கொள்கை முழக்கம். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடன் வட்டமேசை மாநாட்டில் பேசிய எங்கள் தாத்த இரட்டைமலை சீனிவாசன் சோலார் தங்கவயலில் பேசும்போது நாங்கள் கலப்படமில்லாத திராவிடர்கள் என்று பேசியிருக்கிறார். கலப்படமில்லா திராவிடர்கள் என்று பொருள்பட பேசியிருக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கர் திராவிடத்தை பற்றி சொல்லும்போது இந்த மண்ணின் பூர்வீக குடிகள் நாகர்கள் தான். நாகர்கள் என்றால் யார்? இந்தியா முழுமைக்கும் சேரி என்ற சிறைச்சாலையில் வாழ்பவர்கள் தான் நாகர்கள். இவர்கள் தான் முற்காலத்தில் திராவிடர்களாக வாழ்ந்தார்கள், தமிழர்களாக வாழ்ந்தார்கள். தமிழர் என்பதுதான் திரமிளர், திராவிடர் என்று மாறியதாக சொல்கிறார். அதனால் தான் வடக்கே நாகலாந்த், மையத்தில் நாகபுரி கடைசியிலே நாகர்கோவில். ஆக நாகர்கள் இந்தியா முழுமைக்கும் பரவியிருந்தார்கள் என்றால், தமிழர்கள் இந்தியா முழுமைக்கும் வாழ்ந்தார்கள் என்றுதான் பொருள். அவர்கள் திராவிடர்களாக இந்தியா முழுமைக்கும் வாழ்ந்தார்கள் என்றுதான் பொருள். அப்படி வரலாற்றுப் பின்னணி கொண்ட ஆரியத்தை எதிர்க்கும் கூரிய வாளான திராவிடம் இன்று முனை மழுங்கி இருக்கலாம். அதை கூர்மை படுத்துவதை விடுத்து திராவிடத்தை எதிர்ப்பது மடமை.

சாதி ஒழிப்புக்கான அல்லது ஆரியத்தை எதிர்ப்பதற்கான செயல்வடிவமான திராவிடத்தை எதிர்ப்பவர்களால் ஆரியத்தை எதிர்க்க முடியாது. ஆரியத்தை எதிர்க்க முடியாதவனால் இந்துத்துவத்தை வேரறுக்க முடியாது. இந்துத்தை வேரறுக்க முடியாதவனால் இந்திய தேசியத்தை எதிர்க்க முடியாது. இந்திய தேசியத்தை எதிர்க்க முடியாதவனால் தமிழ் தமிழ்தேசியத்தை கட்டி எழுப்ப முடியாது....

அண்ணன் சீமான் அவர்களே உங்களிடம் இளைய தலைமுறை எதோ ஒரு மாற்றத்தை எதிர்ப்பார்க்கிறது. மாற்றத்தை கொடுக்க முடியாவிட்டாலும் ஏமாற்றத்தை கொடுக்காதீர்கள். ஒருவன் சோற்றில் மண்ணை அள்ளிப் போடுவதை விட வரலாற்றை திரிப்பது கொடுமையானது... வரலாற்றை திரிக்காதீர்கள்.... வருங்கால தலைமுறையை வஞ்சிக்காதீர்கள்....

சமகால திராவிடம் இந்துமயமாகிவிட்டதா?


திராவிடம் - தீண்டாமைக்கு எதிரான தீச்சட்டி !
திராவிடம் - சாதியக் கொடுமைகளுக்கு எதிரான சம்மட்டி !!
திராவிடம் - பெண்ணுரிமையை பேணிக்காக்கும் பேராயுதம்  !!!
திராவிடம் -  சுயமரியாதையின் சுடர் ஒளி
திராவிடம் - தமிழ்த் தேசியத்தின் தாயகம்

என்ற வீரிய மூர்க்கத்தனமான முழக்கத்துடன் பண்டிதர் அயோத்திதாசர், தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டு வேர்விட்ட திராவிடத்தை, இன்று தன் விழுதுகளை விடலைப்  பிஞ்சுகள் எல்லாம் கேள்விக்கேட்கும் அளவில் 'திராவிடக் கட்சிகள்' என்று சொல்லிக் கொண்டு ஓட்டு பொறுக்கும் அரசியல் கட்சிகள் நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டார்களா?

ஆரியத்துக்கு எதிர்க்கருத்து பவுத்தம் என்று அயோத்திதாசர் முழங்கியதாக திருமாவளவன் குறிப்பிடுகிறார். அந்த ஆதிபவுத்தத்தின் நீட்சியாகத்தான் நாம் திராவிடத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்துத்துவத்தை மூர்க்கமாக எதிர்த்ததால் தான் பவுத்தம் இந்துமயமாக்கப்பட்டது. இந்துத்துவத்தை வேரறுக்க நினைத்ததால் தான் சமணம் சாய்க்கப்பட்டது. அந்த இந்துத்துவத்தை ஏற்க மறுத்ததால் தான் ஆதித்தமிழர்கள் இன்று சேரி என்ற சிறைச்சாலையில் வாடுகிறார்கள். அந்த இந்துத்துவத்தை வீழ்த்த நினைப்பதால் தான் இன்று இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறார்கள். இதற்கெல்லாம் இந்த ஓட்டு பொறுக்கி கட்சித் தலைவர்கள் என்ன மாதிரியான எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்?

இதற்க்கெல்லாம் முத்தாய்ப்பாக ஆரியத்தின் நேர் எதிரியான திராவிடத்தலைமையை ஆரியத் தலைமை எப்படி கைப்பற்றியது? ஆரிய எதிர்ப்பு என்பது எதிலிருந்து பார்க்க வேண்டும்? ஜெயலலிதா எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு ஆகுமா? சமகாலத்தில் இந்தக் கட்சிகள் எதை நோக்கி நகர்கின்றன? இவை உண்மையில் திராவிடக் கட்சிகள்தானா? இந்துத்துவத்தை வேரறுக்க நாம் எப்படிப்பட்ட ஆயுதத்தை கையில் எடுக்கவேண்டும்? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை காணாமல் திராவிடத்தை நாம் அடுத்த தலைமுறைக்கு எப்படி கொடையாக அளிக்க முடியும்?

1. மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வரும் அளவுக்கு தீவிர இந்து பற்றாளரான  எம்.ஜி.ஆர் ஒருமுறை விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது இந்து என்று குறிப்பிடாமல் திராவிடன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதே எம்.ஜி.ஆர் தான் மவுண்ட் ரோடு பொதுக்கூட்டத்தில் பேசும்போது முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் இருக்கும் வரை, இந்துக்களுக்கு இந்து முன்னணி இருக்கும் என்று பேசி இருக்கிறார். முஸ்லிம் லீகின் நோக்கமும், இந்து முன்னணியின் நோக்கமும் ஒன்றா? இந்து முன்னணியைச் சேர்ந்த ராமகோபாலான் எந்த சேரிக்காவது சென்று ஒரு ஏழைக் குடும்பத்திற்கு உதவி செய்துள்ளாரா? ஆக எம்.ஜி.ஆர் அவர்கள் திராவிடன் என்று குறிப்பிட்டதை அவர் மற்ற மதத்தவரின் ஓட்டுக்களை குறிவைத்தே குறிப்பிட்டுள்ளார் என்று ச‌ந்தேகிக்க‌த் தோன்றுகிற‌து.

2. இந்தியா என்ற பல்வேறு இன‌ மக்களைக் கொண்ட நாட்டின் நலனுக்கு நிச்சயம் ஊறு விளைவிக்கும் கொள்கைகளைக் கொண்டது ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ அமைப்பு. அதன் அரசியல் பிரிவு தான் பி.ஜே.பி . அந்த பி.ஜே.பி யுடன் 2001ஆம் ஆண்டில் தி.மு.க கூட்டணி வைத்து தேர்தல் களத்தை சந்தித்தது. தி.க, ஆரியத்தின் புதிய கிளையாக உருமாற்றம் பெற்றிருக்கும் அ.தி.மு.க. வை ஆதரித்தது. இந்த நிலை எப்படி வந்தது? நிச்சயம் பெரியார் இருந்திருப்பாரேயானால் இருவரையும் தன் தடியாலே அடித்து இருப்பார். தேர்தல் அரசியலில் சமரசம் என்பது தேவையான ஆயுதமாக இருந்தாலும் தன் உயிர்மூச்சுக் கொள்கையை கொல்லைப்புறத்தில் வைத்துவிட்டு கூட்டணி காண்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.

அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றதால் தான் கட்டாய மதமாற்ற தடை சட்டம் எனும் கட்டாய இந்துமயமாக்கல் சட்டத்தை அறிமுகம் செய்தார் ஜெயலலிதா. பசுவதை தடைச் சட்டம் எனும் பெயரில் வழிபாட்டு உரிமைகளை வதை செய்தார். பி.ஜே.பி ஆளும் குஜராத்தில் கூட கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் இல்லையே? தமிழ்நாட்டில் அதற்கு என்ன அவசியம் வந்தது? பூரண இந்துத்துவ கட்சியாகவே தன் செயல்பாட்டின் மூலம் அறிவித்துக் கொண்டார் ஜெயலலிதா. சங்கராச்சாரியாரின் ஆலோசனைப்படி ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திமுக இந்துத்துவ தலைமையை தாங்கிப் பிடித்தன. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தின் தான் திண்ணியம் கொடுமை அரங்கேறியது. தாழ்த்தப்பட்ட கருப்பையா என்ற விவசாயி ஒருவரிடம் லஞ்சம் வாங்கிய முன்னாள் பஞ்சாயத்து தலைவரையும் அவரது கணவர் வாத்தியார் சுப்பிரமணினையும்  ஊரார் முன் அந்த விவசாயி அம்பலப்படுத்தியதால் அவர் வாயில் மலத்தை திணித்து ஆதிக்கசாதிகள் கொடுமை செய்தன. ஒருவாரகாலம் அந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருந்தது. விடுதலை சிறுத்தைகள் தலையிட்டு அதை வெளிச்சம் போட்டுக் காட்டினர். அதன் பிறகு அந்த வாத்தியார் கைது செய்யப்பட்டார். பின் அவர் விடுதலையும் செய்யப்பட்டார். அதைப் பற்றி ஒரு வரி கூட சட்டமன்றத்தில் பேசவில்லை என்று திருமாவளவன் தன்னுடைய அத்துமீறு நூலில் பதிவு செய்துள்ளார். சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர் என்று அழைக்கவா? இல்லை இதய தெய்வம் என்று அழைக்க வேண்டுமா என்று விவாதம் நடந்ததாகவும், அதனால் அந்த அவையில் என்னால் குந்தியிருக்க முடியாமல் வெளிநடப்பு செய்தேன் என்று மனம் நொந்து எழுதி இருந்தார். ஆனால் கருணாநிதிக்கு  அதைக்கண்டித்து அரசியல் செய்யக்கூட மனம் வரவில்லை. ஏன் அதைக் கண்டிக்கக்கூட‌ அவர் முன்வரவில்லை?

3. பாப்பாபட்டி, கீரிப்பட்டி இந்திய ஜனநாயகத்துக்கே சவால் விடப்பட்ட ஒரு கேவலமான வரலாறு. அந்த சாதி வெறியாட்டத்தில் களப்பலியான சாதி ஒழிப்பு போராளி மேலவளவு முருகேசனை திமுக, அதிமுக, மதிமுக இவை எவையாவது நினைவு கூறுகின்றனவா? வாச்சாத்தி பெண்கள் பாலியல் கொடுமை, கோயம்புத்தூரில் தலித் ஒருவர் வாயில் ஆதிக்க சாதியினர் சிறுநீர் கழித்தது. பரமக்குடி கலவரம், விழுப்புரம் வானூரில் தொழிலாளியின் வாயில் மலம் திணித்தது, விழுப்புரம் அரசு அதிகாரிகள் பழங்குடியின பெண்கள் பாலியல் கொடுமை, காவல் துறை படுகொலைகள் என்று ஜெயலலிதா ஆட்சிக்காலங்களில் எண்ணிலடங்கா இந்துத்துவ வெறியாட்டங்கள் அரங்கேறியுள்ளன. ஆனால் அதை எதிர்த்து கருணாநிதி, "நான் நாடாண்டபோது இப்படிபட்ட கேவலங்கள் நடக்கவில்லை. இதோ பாரீர் ஜெயலலித்தா ஆட்சிக்காலத்தில் அவலங்கள் அரங்கேறுகின்றன" என்று கேவலம் அரசியல் கூட செய்ய மறுப்பதேன்? தம் கட்சிக்காரர்களின் கைதை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் செய்யும் கருணாநிதி, பரமக்குடி கலவரத்தை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்திருக்கலாமே?

4. காவல்துறையின் தலித் விரோதப் போக்குக்கு அளவே இல்லை. தலித் வாலிபர்களை நள்ளிரவில் புகுந்து கைது செய்து சித்திரவதை செய்வது, தலித் பெண்களை நான்கு பேர் ஐந்து பேர் சேர்ந்து கற்பழிப்பது என்ற கொடுமைகள் அரங்கேறின. வந்தவாசி அருகே பொன்னூர், பெரம்பலூர் அருகே ஒகலூர், மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம், கொடைக்கானல் அருகே குண்டுப்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் குடியன்குடி இவை அனைத்துமே சேரிகள். ஒரு பாப்பனர் வீட்டிலோ, கவுண்டர் வீட்டிலோ, தேவர் வீட்டிலோ, காவல் துறை அத்துமீறி நுழைந்துவிடுமா? திண்ணியத்தில் நடந்த கொடுமையைக் கண்டித்திருந்தால் அடுத்து அடுத்து நடந்திருக்குமா? ஏன் கருணாநிதிக்கு மனம் வரவில்லை? ஏன் வைகோவுக்கு மனம் வரவில்லை? சேரிக்கு ஆதரவாக ஒருதுளி பேனா மையைக்கூட சிந்த மனம் இல்லையே?

இன்று மேடை தோறும் முழங்குகிறார்கள், மெட்டுக்கட்டிப் பாடுகிறார்கள் 'திராவிட வரலாறு நூற்றாண்டை கடந்து விட்டது என்று. இப்படி பழங்கால வரலாறுகளை பேசிப் பேசியே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவே துடிக்கிறார்களே? ஏன் இதற்கு மேலும் வரலாறுகள் படைக்கப் போவதில்லையா? இன்று நாம் திராவிட வரலாறுகளை திரும்பி பார்ப்போமானால் அதில் அளப்பரிய தியாகமும், களப் பலியும், ரத்தக்கறையும் படிந்து நிற்கும்; நெஞ்சம் பூரித்துப் போகும். ஆனால் இன்னும் நூறாண்டுகள் கழித்து திரும்பிப் பார்ப்போமானால் அதில் துரோகமும், சூழ்ச்சியும், சூதும், பதவி மோகமுமே நிறைந்து அவ லட்சணமாக நிற்கும். பெரியாரின் மறைவுக்குப் பின்னர் திராவிடத்தின் சாதி ஒழிப்பு, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிரான‌ களப்பணி என்ன என்று பார்த்தால்  பூதக்கண்ணாடியை  வைத்துதான் தேடவேண்டும். இப்படி எல்லாம் திராவிடத்தை சரித்து விடவா மூத்திரப் பையுடன் சூத்திர வேதங்களைக் கண்டித்தார் தந்தை பெரியார். நெஞ்சம் உறுத்தவில்லையா? கருணாநிதியைப் பொருத்தமட்டில் ஜெயலலிதா எதிர்ப்பே ஆரிய எதிர்ப்பாகி விட்டது. கி.வீரமணி தலைமையிலான திராவிடர் கழகமோ தி.மு.க வின் அறிவிக்கப்படாத தேர்தல் பணிக்குழுவாகவே செயல்படுகிறது.வைகோவுக்கே ஜெயலலிதா, இல்லை கருணாநிதி. அதுவும் இல்லை என்றால் பா.ஜா.க செல்லும் இடத்திற்கு சென்றுவிடுவார். தற்போது கூட பா.ஜ.கா.வோடு கூட்டணி காய் நகர்த்துவதாகத்தான் தெரிகிறது. 

3. கருணாநிதி, நான் தாழ்த்தப்பட்ட மக்களின் சம்ம‌ந்தி என்று சொல்வார். அதை அவர் எந்த அர்த்தத்தில் சொல்கிறாரோ தெரியாது. ஆனால் அவர் கூற்றின் நோக்கம் தாழ்த்தப்பட்டவர்கள் கேவலமானவர்கள், அவர்களுக்கே நான் சம்மந்தி என்று சொல்லி தான் பெருந்தன்மையைக் காட்ட முன்வருகிராரோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. 1937 என்று நினைக்கிறேன் ஆண்டு சரியாக‌ நினைவில்லை, திராவிடர் கழகத்திற்கு இலட்சினை உருவாக்கப்பட்டபோது வட்டவடிவில் கருமை நிற வண்ணம் பூசி விட்டு சிகப்பு வண்ணம் பூச இருந்த வேளையில் யாரும் எதிர்பாராத வேளையில் தன் கையைக் கிழித்து ரத்தத்தைக் கொடுத்த கருணாநிதியின் கொள்கை வெறி என்னவானது?


சமகால திராவிடத்தை பொருத்தமட்டில் எனக்கு ஒரு ஐயம் உண்டு. ஆரிய எதிர்ப்பு என்பது வெறும் பார்ப்பன‌ எதிர்ப்பு மட்டும் தானா? இதை திருமாவளவன் தன்னுடைய இந்துத்துவத்தை வேரறுப்போம் என்ற நூலில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். பார்ப்பானியம் என்பது பார்ப்பனர்கள் வசிக்கும் அல்லது அவர்கள் ஆளுமை செலுத்தும் வட்டாரங்களில் மட்டுமே உள்ளது. ஆனால் இந்துத்துவம் என்பது பார்ப்பனர்க‌ள் அல்லாத ஒவ்வொரு சாதி இந்துக்கள் வீட்டிலும் இருக்கிறது. எனவே பார்ப்பனியத்தையும், இந்துத்துவத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும். பார்ப்பனியம் கொடுமையானது ! இந்துத்துவம் பயங்கரமானது!!. தமிழ் பேசும் வன்னியர் எப்படி சாதி இந்துப் பட்டியலில் வந்தான்? தமிழ் பேசக்கூடிய பறையன் எப்படி சாதி இந்துப் பட்டியலில் இருந்து புறக்கணிக்கப் பட்டான்? பதவி பரிசுகளுக்காக இந்துத்துவத்தை ஆதரித்த அல்லது ஏற்றுக் கொண்ட வன்னியர்கள், கவுண்டர்கள், முதலியார்கள், தேவர்கள் போன்றவர்கள் சாதி இந்துப் பட்டியலில் வந்தார்கள். எந்த காலத்திலும் இந்துத்துவத்தை ஏற்றுக் கொள்ளமாட்டோம், இந்துத்துவத்தை வேரறுப்போம் என்று முழங்கிய பறையர், சக்கிலியர், அருந்ததியர் போன்றவர்கள்  சேரிச் சிறையில் அடைக்கப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிடம் என்பதைப் பேசிப் பேசி, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் நிலைக்கு இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகள் வந்துவிட்டன‌. இன்னமும் தலித் பொது சாலையில் நடக்க முடியவில்லை. இன்னமும் இரட்டைக் குவளை முறை இருக்கிறது. இன்னமும் தலித் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. இன்னமும் தீண்டாமைக் கொடுமை இருக்கிறது. இன்னமும் ஆதிக்கசாதிகள் தலித்துகள் வாயில் சிறுநீரையும், மலத்தையும் கழிக்கிறார்கள். இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய அல்லது கண்டிக்க வேண்டிய கடமை இந்த கட்சிகளுக்கு இல்லையா? தலித் விவகாரத்தில் மட்டும் ஏன் ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒரு கோட்டில் நிற்கிறார்கள்? இதற்கெல்லாம் ஒரு பதிலை வைத்திருக்கிறார்கள் ஜெயலலிதா திராவிடரே கிடையாது என்று. பின் ஏன் இந்தக் கட்சிகளை திராவிடக் கட்சிகள் என்கிறோம்? இந்தக் கட்சிகள் இந்துமயமாகிவிட்டன. இவை திராவிடக் கட்சிகள் கிடையாது.

திராவிடப் போர்வையில் உள்ள ஆரியக் கட்சிகளை விரட்டுவோம்!! இல்லையென்றால் சாதித் தமிழர்களுக்கு எதிராக போராடும்  தலித் வாலிபர்கள், தலித் மக்கள் இந்த போலிகளை எதிர்த்துப் போராடவும் தயங்கமாட்டார்கள் !!!


(உதவிய நூல்கள்: திருமாவளவனின் அத்துமீறு, இந்துத்துவத்தை வேரறுப்போம்)

தலித் விடுதலையே ! தமிழ் தேசிய விடுதலை !!



இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்டவர்கள் தமிழர்கள். அப்படி அரும்பாடுபட்டு, அடிமையாக இருந்த இந்தியாவை சுதந்திர இந்தியாவாக மாற்றியவர்கள் தமிழர்கள். குறிப்பாக தலித்துகள். இப்பொழுது இந்திய தேசியம் தமிழ்த் தேசியத்தை நசுக்கிக் கொண்டு இருக்கிறது. அந்த தமிழ்த் தேசியத்திற்கு தன்னுயிரை துச்சமென மதித்துப் போராடிய தலித்துகளை தமிழ்த் தேசியவாதிகள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை! அவர்களின் இன்னல்களில் பங்கெடுப்பதில்லை!! அவர்களின் கண்ணீரைத் துடைக்க இவர்கள் கரங்கள் நீள்வதில்லை! போராட்டக் களங்களுக்கும், பொய் வழக்குகளுக்கும் எங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் தமிழ்த் தேசியவாதிகள், எங்களது உடலில் ரத்தம் வடிந்தாலும், எங்கள் வாயில் ஆதிக்க சாதிகள் மலத்தை திணித்தாலும் கண்டு கொள்வதில்லை!!!
தமிழ் நாட்டின் இலக்கியத்தில், வரலாற்றில், தலித்துகளின் கனவுகளும் லட்சியங்களும் பேசப்பட்டிருக்கின்றன, போற்றப்பட்டிருக்கின்றன, சிறப்பிக்கப்பட்டும் கொண்டாடப்பட்டும் உள்ளன. அவர்களை கடவுள் அருள் பெற்றவர்களாக, அவரது கருணைக்குப் பாத்திரமான புண்ய புருஷர்களாக, மேல் தட்டுகளில் இருப்போரையும் உள்ளடக்கிய மொத்த சமூகத்தாலும் தொழத்தக்கவர்களாக காவியங்கள் பாடுகின்றன. கோவில்களில் அவர்கள் சிலைகள் ஆழ்வார்களாக, நாயன்மார்களாக வீற்றிருக்கின்றன. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார், அவர்தம் காலத்துக்கு முன் வாழ்ந்த நாயன்மார்கள் அனைவரையும் ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி அவர்கள் ஒவ்வொருவரும் தேவாம்சம் கொண்டவர்கள் என்றும் சிவனின் அருள் பெற்றவர் என்றும் அவர்களுக்கு முன் தாம் ஒரு எளிய தொண்டனே என்றும் தன் திருத்தொண்டத் தொகையில் சிறப்பித்துப் பேசியுள்ளார். அத்தகைய பெரியார்களில், பள்ளர் சமூகத்தில் பிறந்த திருநாளைப் போவார் என்று சிறப்பிக்கப்படும் நந்தனாரும் ஒருவர். புராணக் காலங்களில் மதிப்போடு இருந்த ஆதித்தமிழர்களான தலித்கள் பின்னாளில் சேரிகளில் அடைத்து சித்ரவதை செய்யப்பட்டனர்.
ஒடுக்கப்பட்ட மக்களை எவ்வாறு விடுவிப்பது, அவர்களை எப்படி அரசியல்படுத்துவது என சிந்தித்த அயோத்திதாச பண்டிதர், தன் தந்தை கந்தசாமியோடு ஊட்டி சென்றார். தன் 25 வயதில் “அத்வைதானந்த” சபையை 1860ல் உருவாக்கி நடத்தினார். நீலகிரியில் தேயிலைத் தோட்டப் பணியாளர்களையும் மலையின பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்தார். இதன் மூலம் சாதிபேத உணர்வை ஒழிக்க முற்பட்டார். இரங்கூனில் செல்வச்செழிப்பாக வாழ்ந்தாலும் தமிழின மக்கள் எப்படி சாதியால் ஒடுக்கப்பட்டார்கள்? தீண்டப்படாத மக்களாக ஒதுக்கப்பட்டது எப்படி? என்றும் அவர்கள் விடுதலை குறித்து சிந்தித்துக்கொண்டே இருந்தார். மீண்டும் ஊட்டி வந்து, தன் உறவினரான ரெட்டமலை சினிவாசன் தங்கை தனலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பட்டாபிராமன், மாதவராம், ஜானகிராமன், ராஜாராமன் 4 மகன்கள் பிறந்தனர். இந்நேரத்தில் ஊட்டிக்கு ஓய்வெடுக்க ஆல்காட் அவர்கள் வந்திருந்தார். பண்டிதரும் ரெட்டமலை சினிவசனும் ஆல்காட்டை சந்தித்துப் பேசினார்கள். பல முறை விவாதித்தனர்.
மதம், பவுத்த மதம் குறித்து நிறைய விவாதித்தனர். இச்சந்திப்புகள் பண்டிதரை இனொரு திசைக்கு இட்டுச்சென்றது .
சென்னையில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்பதற்கு பள்ளி ஒன்றை துவக்கி நடத்திக்கொண்டிடுக்கும் அருட் பணியாளர் ஜான் ரத்தினம் அவர்களோடு பண்டிதருக்கு நட்பு ஏற்பட்டது. ஒத்த கருத்துகொண்ட இருவரும் சேர்ந்து பணியாற்றினார்கள். ஜான் ரத்தினம் 1882இல் திராவிடர் கழகம் என்ற ஒரு அமைப்பை நடத்திவந்தார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காக 1885இல் “திராவிட பாண்டியன்” என்னும் இதழை துவக்கினார். அந்த இதழின் துணை ஆசிரியராக பண்டிதர் பொறுப்பேற்றார். பின்னால் தமிழன் இதழ் சிறப்பாக நடத்தியதற்கு இந்தப் பின்புலமே காரணமாக இருந்தது. ஆல்காட் , ஜான் ரத்தினம் இருவருடைய தோழமையினால் பண்டிதரின் சிந்தனை விசாலமடைந்தது. தமிழின பூர்வகுடிகள் ஏன் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள்? என்ற தேடுதலால் ஊர் ஊராக சுற்றித்திரிந்தார். அப்போதுதான் “நாராதீய சங்கைத் தெளிவு” எனும் ஓலைச்சுவடி கிடைத்தது. அதில் பவுத்தர்கள் எப்படி தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்பதையும் சாதி பேத விவரங்களையும் விவரித்திருந்தது. அதன் 570 பாக்களையும் படித்துவிட்டு, தன் நெடிய ஆராய்ச்சியின் விளைவாக பவுத்தத்தின் அடிப்படையை தாம் வந்தடைந்ததாக பண்டிதர் குறிப்பிடுகிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் தொல்தமிழர்கள் சாதியற்ற திராவிடர்கள் உரிமைகளைப் பற்றி பேசி, வேத பிராமணீயத்தை எதிர்த்து, சாதி ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு, பிரதிநிதித்துவம் போன்ற நவீன கருத்தாக்கங்களை உருவாக்கிய பண்டிதர் க.அயோத்திதாசரின் தமிழன் இதழ், 102 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. சென்னை இராயப்பேட்டையிலிருந்து புதன் தோறும் 19.06.1907 முதல் நான்கு பக்கங்களுடன் அன்றைய காலணா விலையில் “ஒரு பைசாத் தமிழன்” என்று தனித்துவமாய் பெயர் சூட்டப்பட்டு வெளிவந்தது. தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் வேத மத, பிராமணீய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, தமிழ் மொழியுணர்வு, பகுத்தறிவு, சமுக நீதி பிரதிநித்துவம், தலித் விடுதலை, சுயமரியாதை, இந்தி எதிர்ப்பு, பெண் விடுதலை போன்ற கருத்துகளை உரையாடல் செய்து பல இயக்கங்களுக்கு ஒரு முழுமையான அரசியல் கருத்துத் தொகுப்பை வழங்கிய தமிழன் இதழ் குறித்து யாரும் பேச தயக்கப்படுகிறார்கள்.
இதழியலிலும் அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் தமிழன் இதழிலிருந்தே துவக்கம் பெற்றன என்று நாம் உறுதியாக கூறலாம். பண்டிதருடைய காலத்தில் இந்துத்துவம் மீட்டுருவாக்கம் செய்த காலம். பிரம்மா சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மூலம் அனைத்தையும் இந்துக்குள் வலிய திணித்த காலம். 1861 – 1891 வரை ‘யாரெல்லாம் கிறித்துவர்கள் இசுலாமியர்கள் இல்லையோ அவர்களெல்லாம் “இந்து” என பதிவு செய்த காலம். இதற்கிடையில் 1881களில் ஆங்கில அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளில் புகுந்து தலித்துகளுக்கு தனித்துவமான அடையாளத்தைப் பதிவு செய்கிறார். “ஆதித்தமிழன்” original tamils என்று பதிவு செய்ய வேண்டுமென வற்புறுத்துகிறார்.
அப்போதெல்லாம் சாதியைச் சொல்லித்தான் அழைப்பார்கள். சாதிதான் தமிழனுக்கு அடையாளமாக இருந்த காலம். அரிஜன் என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லை. அதற்குப் பதிலாக “பஞ்சமர்கள்” என்றும் Depressed Class என்று அழைப்பதை மறுத்து “ஆதித் தமிழன்” என அழைத்தார். சாதியின் பெயரால் அழைக்கப்பட்ட தமிழர்களை சாதியற்ற தமிழர்களாகப் பதிவு செய்தார். இழிவான பெயர்களை மறுப்பது என்பது கூட சாதி ஒழிப்புக்கு வழி என்றார். 1886 ஆண்டில் “ஆதி தமிழர்கள் (தலித்கள்) இம்மண்ணின் மைந்தர்கள், அவர்கள் இந்துக்கள் அல்ல” என அறிக்கை விட்டார். “நீண்ட காலத்திற்கு முன் நிலவிய பிராமணிய எதிர்ப்பு மரபின் வாரிசுகளே அவர்கள்” என்றார். தமிழ், தமிழன் அடையாளத்தை தலித் மக்களை மையமாகக்கொண்டு ஒரு தேசியத்தை கட்டமைக்க முயற்சிக்கிறார்.
இந்திய பாரம்பரியம் பௌத்தம் மதமாக இருந்தது என்பார். அதனை தன் தமிழ்ப் புலமை மூலம் விளக்குகிறார். இந்தியா என்ற சொல் ‘இந்திரம்’ என்பதின் திரிபு. இந்தியாவை புத்தனும் அவனைக் குருவாக கருதும் மக்களும் வாழும் நாட்டிற்கு ‘இந்திரதேசம்’ என்ற பெயர் வந்தது. ஆரியர் வருகைக்கு முன் இங்கே ஒரு தேசம் இருந்தது. இந்த தேசத்தை பவுத்தம் உருவாக்கியது. அதில் பகுத்தறிவு, மனித நேயம், சமயம், அறக்கருத்தொற்றுமை, மெய்யியல் மற்றும் நடைமுறை சார்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. இதில் அந்நியரான வெளியாரின் ஊடுருவலால், படையெடுப்பால் காலப்போக்கில் அது மந்திர மாயத்தன்மையென திரிக்கப்பட்டது. அதாவது சொந்த நாட்டின் சாதியற்ற பண்பாட்டை அயல் சக்திகள், வெளியாட்கள் நசித்து திரித்துவிட்டார்கள்.
”மண்ணின் மைந்தர்களே இம்மண்ணை ஆளவேண்டும்” என்கிறார். 30-10-1912 தமிழனில் எழுதுகிறார், 'சுதந்திரம் அளித்தால் இம்மண்ணின் மைந்தரான தமிழருக்கே வழங்கவேண்டும்' என்றார்.  "தமிழ் மொழியில் பிறந்து, தமிழ் மொழியில் வளர்ந்து, தமிழ் மொழிக்குச் சொந்தமான பூர்வக்குடிகள் சுதேசிகளுக்கு வழங்கவேண்டும்”. மேலும் "கருணை தாங்கிய ஆங்கில ஆட்சியாளர்களே சுதேசிகள் மீது கருணை பாவித்து ஆட்சி அதிகாரத்தை இத்தேச பூர்வகுடிகளுக்கு அளிப்பதே கருணையாகும். நேற்று குடியேறி வந்தவர்களையும் முன்னர் குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் எனக் கருதி அவர்களிடம் ஆட்சியை வழங்கினால், நாடு பாழாகி சீர்கெட்டுவிடும்” என நாடு விடுதலை பெற 35 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கர் 1930களில் தலித்கள் ஒரு தேசத்தை ஆளுகிற வர்க்கமாக மாற வேண்டுமென்கிறார். இவ்வாறு பண்டிதர் அயோத்திதாசரும், புரட்சியாளர் அம்பேத்கரும் ஆதிதமிழர்களான தலித்துகளை மையப்படுத்தியே ஒரு ஆளுமையை, ஒரு தேசத்தை உருவாக்க முயன்றார்கள்.
தமிழகத்தின் மற்றும் ஒரு புரட்சியாக அல்லது எழுச்சியாக பேசப்படுவது மொழிப்போராட்டம். அதில் தலித்துகளின் பங்களிப்பு அளப்பரியது. மொழிப்போரின் முதல் பலியே ஒரு தலித். 1937ல் நடைபெற்ற சென்னை மாகான பொதுத்தேர்தலில் நீதிக்கட்சி தோற்றது. அத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரசு கட்சி இந்தி திணிப்பைத் தன்னுடைய கொள்கையாகக் கொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி மொழியைக் கட்டாயப்பாடமாக வைக்கப் போவதாக முதலமைச்சர் இராசகோபாலாச்சாரி அறிவித்தார். இந்தி மொழியை நம் மாணவர்களுக்கு பாடமாக வைத்தால் நம்முடைய தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு கேடு வரும், அதோடு நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் அழிந்துவிடும் என்பதை உணர்ந்த தமிழர்கள் கூட்டங்கூட்டமாக அணிதிரண்டு, இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடத் தொடங்கினார்கள்.
மக்களின் தமிழ் மொழி உணர்வை, இந்தி திணிப்பு எதிர்ப்புணர்வை ஒருங்கிணைத்து வழிநடத்திச் சென்றவை தமிழ் அமைப்புகளே. கரந்தைத் தமிழ்ச் சங்கம், திருவையாற்றுச் செந்தமிழ் கழகம், உலகத் தமிழ் மக்கள் தற்காப்பு பேரவை, நாமக்கல் தமிழ்ச் சங்கம், தென்காசி திருவள்ளுவர் கழகம், நெல்லைத் தமிழ்ப் பாதுகாப்பு சங்கம்….. போன்ற தமிழ் அமைப்புகளும், வேங்கடாசலம், உமாமகேசுவரனார், சோமசுந்தர பாரதியார், கா.சுப்பிரமணியம், கு.மு.அண்ணல் தாங்கோ போன்ற தமிழறிஞர்கள் தலைமையேற்று நடத்திய இந்தி எதிர்ப்பு ஊர்வலங்கள், கண்டனப் பொதுக்கூட்டங்கள், சாலை மறியல், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களின் விளைவாக தமிழகம் முழுவதும் (ஆந்திரா, கேரளா, கர்நாடகம் உள்ளடக்கிய சென்னை மாகாணம் என்றாலும் அங்கெல்லாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெறவில்லை) தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில் குறிப்பாக தொல் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் இந்தியெதிர்ப்புப் போர் கொழுந்துவிட்டு எரிந்தது.
இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் மிக அதிகமாக தொல் தமிழர்கள் கலந்துகொண்டு சிறை சென்றனர். அதை "சிறையில் ஒழுங்காக சாப்பாடு கிடைக்கும் என்பதால் பல ஹரிசனங்கள் கைதாகியுள்ளார்கள்" என்று டாக்டர் சுப்புராயன் சட்டமன்றத்தில் தொல் தமிழர்களின் தமிழுணர்வைப் பகடி செய்தார். இதையே "அற்பக்கூலிகளுக்கு அமர்த்தப்பட்ட கூலிகள்" என முதலமைச்சர் இராசாசி கேவலப்படுத்தினார். இந்த முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழுக்காக முதன்முதலில் 15.01.1939ல் தன்னுயிரை ஈகம் செய்தவர் எசு.நடராசன் என்ற தொல் தமிழர். அவருக்கு அடுத்தே, மூன்று மாதங்களுக்குப் பின்னர் இடை நிலைச்சாதியைச் சேர்ந்த தாளமுத்து 11.03.1939ல் உயிர்த்தியாகம் செய்தார். ஆனால் ஏடுகளில் பெயர்ச் சூட்டலில் 'தாளமுத்து நடராசன்” என்று தாளமுத்து முன்பாகவும் நடராசன் இரண்டாவது இடத்திற்கும் ஒதுக்கியது. அதை உண்மையாக்கும் பொருட்டு அரசு மாளிகையொன்றிற்கு ‘தாளமுத்து நடராசன் மாளிகை’ என பிழையான வரிசையில் பெயர் சூட்டப்பெற்றுள்ளது.
தமிழ்மொழி காக்க உயிர்விட்ட நடராசன் பிணத்தை, மரணத்தை வைத்துதான் தமிழ்மொழி உணர்ச்சியை உசுப்பிவிட்டார்கள். "நடராசன் அவர் குடியில் ஒரே பிள்ளை. நம் மகன் சிறையிலிருந்து வருவான் அவனுக்கு திருமணம் செய்வோம் என் எண்ணிய நடராசன் பெற்றோர் ஏமாற்றமுற்றதையும் வருத்தமாகக் கூறி மணக்கோலத்தில் போக இருந்த நடராசன் அநியாயமாகப் பிணக்கோலத்தில் சென்று விட்டாரே” என்று நடராசன் இறுதி நிகழ்ச்சியில் கு.மு.அண்ணல்தங்கோ அவர்கள் உருக்கமாக பேசியுள்ளார். தமிழ்மொழிக்காக உயிர் விட்ட நடராசனின் மரணம் குறித்து விளக்கம் தந்த முதலமைச்சர் ராசாசி, "நடராசன் படிப்பறிவில்லாதவர், அதனால்தான் அவர் மறியலில் ஈடுபட்டார். அவரைப்போல படிப்பறிவில்லாத அப்பாவிகளை இந்தி எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்றார். அதற்கு கடுமையான கண்டனம் எழுந்தது.
நடராசனின் தந்தையார் முதல்வர் ராசாசியின் விளக்கத்தை மறுத்து, "இந்தி எதிர்ப்பிற்காக மறியலில் ஈடுபட்டு நடராசன் கைதானபோது அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை செய்துவிடுகிறோம் என அரசு அதிகாரிகள் அவரிடம் வற்புறுத்தியுள்ளீர்கள். ஆனால் "கோழையாக வாழ்வதைவிட வீரனாக சாவதையே நான் விரும்புகிறேன்” என நடராசன் கூறியுள்ளார். அப்படியே வீரமரணமும் எய்துவிட்டார். இப்படியே தலித்துகளின் வரலாறு மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வருகிறது ...
இன்று சிலர் பேசுகிறார்கள் தமிழ்த் தேசியத்தை வீழ்த்தியது திராவிடமே. திராவிடத்தை வீழ்த்தினால் தமிழ்த் தேசியம் மலர்ந்து விடும் என்று. அந்த அறிவுஜீவிகளுக்கு ஒன்றை சொல்கிறேன். திராவிடம் என்பது பெரியாரின் புதிய கண்டுபிடிப்பு அல்ல. எங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் சித்தாந்தம். திராவிடம் என்பது அண்ணாதுரை, கருணாநிதி, வைகோ என்ற அரசியல்வாதிகளின் வெற்று முழக்கம் அல்ல. எங்கள் பாட்டன் அயோத்திதாசரின் கொள்கை முழக்கம். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடன் வட்டமேசை மாநாட்டில் பேசிய எங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் கோலார் தங்கவயலில் பேசும்போது நாங்கள் கலப்படமில்லாத திராவிடர்கள் என்று பேசியிருக்கிறார். 
உதாரணமாக இன்று நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள் ரகசியமாகப் பேசு என்று சொல்லுவார்கள். ஆனால் சேரியில் வாழும் தமிழர்கள் கமுக்கமாகப் பேசு என்று தூயதமிழில் பேசுவார்கள். கமுக்கம் என்ற தூய தமிழை கமுக்கமாக சாதி இந்துக்கள் மறைத்து விட்டனர். புரட்சியாளர் அம்பேத்கர் தலித்துகள் யார் என்று குறிப்பிடும் போது இந்த மண்ணின் பூர்வீக குடிகள் நாகர்கள் தான். நாகர்கள் என்றால் யார்? இந்தியா முழுமைக்கும் சேரி என்ற சிறைச்சாலையில் வாழ்பவர்கள் தான் நாகர்கள். இவர்கள் தான் முற்காலத்தில் திராவிடர்களாக வாழ்ந்தார்கள், தமிழர்களாக வாழ்ந்தார்கள். தமிழர் என்பதுதான் திரமிளர், திராவிடர் என்று மாறியதாக சொல்கிறார். அதனால் தான் வடக்கே நாகலாந்த், மையத்தில் நாகபுரி கடைசியிலே நாகர்கோவில். ஆக நாகர்கள் இந்தியா முழுமைக்கும் பரவியிருந்தார்கள் என்றால், தமிழர்கள் இந்தியா முழுமைக்கும் வாழ்ந்தார்கள் என்றுதான் பொருள். அவர்கள் திராவிடர்களாக இந்தியா முழுமைக்கும் வாழ்ந்தார்கள் என்று சொல்கிறார்.
இந்தியாவில் இரண்டே தேசியங்கள் ஒன்று இந்திய தேசியம், மற்றொன்று தமிழ்த் தேசியம். ஏன் மற்ற மொழிகள் எல்லாம் தேசிய இனங்கள் இல்லையா? என்றால் அவர்கள் எல்லோரும் இந்துத்துவத்தை ஏற்றுக்கொண்டார்கள், சமஸ்கிருத்தத்தை வழிபட்டார்கள். அவர்கள் மொழிவழி தேசியத்தை விரும்பவில்லை. இந்தியாவில் இந்திய தேசியத்தை எதிர்க்கும் ஒரே கருத்தியல் தமிழ்த் தேசியம் மட்டும் தான். தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க ஒரே வழி இதுதான் அது யாதெனில்:
இந்திய தேசியத்திற்கு எதிர்க்கருத்து தமிழ்த் தேசியம், தமிழ்த் தேசியத்தை வெல்ல ஏழை இந்தியாவை மாற்றவேண்டும், ஏழை இந்தியாவை மாற்ற சாதியத்தை ஒழிக்க வேண்டும், சாதியத்தை ஒழிக்க இந்துத்துவத்தை வேரறுக்க வேண்டும், இந்துத்துவத்தை வேரறுக்க அதைக் கட்டி காப்பாற்றும் இந்திய தேசியத்தை எதிர்க்க வேண்டும், இந்திய தேசியத்தை எதிர்க்க தமிழ்த் தேசியத்தை மீட்க வேண்டும். இதுதான் கருத்தியல். ஆக சாதியை ஒழிக்க தமிழ்த் தேசியம் தேவை, தமிழ்த் தேசியத்தை வெல்ல சாதியத்தை ஒழிக்க வேண்டும். இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. பிரித்துப் பார்ப்பது இரண்டுக்கும் குந்தகம், இரண்டையும் இழக்க நேரிடும் செயல். சாதி ஒழிப்புக்கான அல்லது ஆரியத்தை எதிர்ப்பதற்கான செயல்வடிவமாக விளங்கும் திராவிடத்தை எதிர்ப்பவர்களால் ஆரியத்தை எதிர்க்க முடியாது. ஆரியத்தை எதிர்க்க முடியாதவனால் இந்துத்துவத்தை வேரறுக்க முடியாது. இந்துத்துவத்தை வேரறுக்க முடியாதவனால் இந்திய தேசியத்தை எதிர்க்க முடியாது. இந்திய தேசியத்தை எதிர்க்க முடியாதவனால் தமிழ்த் தேசியத்தைக் கட்டி எழுப்ப முடியாது..
இன்றைய சமகாலத்தில் தமிழ்த் தேசியத்தின் முக்கிய பிரச்சினையான ஈழப்பிரச்சனையில் தலித்துகளின் பங்களிப்பு அளப்பரியது. போராட்ட களங்களுக்கும், பொய் வழக்குகளுக்கும் எங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் தமிழ்த் தேசியவாதிகள், எங்களது உடலில் ரத்தம் வடிந்தாலும், எங்கள் வாயில் ஆதிக்க சாதிகள் மலத்தைத் திணித்தாலும் கண்டு கொள்வதில்லை !!!
சகோதரி செங்கொடி தான் பிறந்தது பழங்குடியினர் சமூகமாக இருந்தாலும், மக்களோடு சரிசமமாக வாழமுடியவில்லை என்றாலும், மூன்று தமிழர்கள் உயிரைக்காக்க துணிந்தாளே - அவள் பிறந்த பழங்குடியின சமூகத்தின் பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்தார்களே - எந்த தமிழ்த்தேசியவாதி களத்திலே இறங்கிப் போராடினான்? மேலும் கடலூர் அன்னவள்ளியை சேர்ந்த ஆனந்த், ஜெயந்கொண்டம் ராஜசேகர், புதுக்கோட்டை பாலசுந்தரம், நெல்லை குருவிக்குளம் கிருஷ்ணமூர்த்தி, கரூர் சிவானந்தம், சீர்காழி ரவிச்சந்திரன், கடலூர் சுப்பிரமணி, சிதம்பரம் ராஜேந்திரன் இன்னும் பலபேர் உயிர்நீத்தார்கள்
யாருக்காக? எதற்காக? இவர்கள் எல்லோரும் மாடமாளிகையில் வாழும் கோடீஸ்வரர்களா? பெரும் பணமுதலைகளின் பிள்ளைகளா? பெரும் நிலச்சுவாந்தர்களின் வாரிசுகளா?
இல்லையே... அன்றாடம் காய்ச்சிகள்... சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள்... ஆனாலும் தமிழனுக்காக உயிரை இழந்தனர்... ஈழத்தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என்று பால்குடம் தூக்கும் தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் யோசிக்க மறுப்பது எது?
பால்விலை உயர்ந்தாலும், பேருந்து கட்டணம் உயர்ந்தாலும், ஈழத்தமிழர் பிரச்சனையானாலும், மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க வேண்டுமானாலும் முல்லைப் பெரியார் பிரச்சனையானாலும் வீதியில் இறங்கி உயிரைத் துச்சமென மதித்து உயிர்துறக்கும் அவர்கள் வீடுகள் கொளுத்தப்பட்டாலும், அவர்களை அரசே சுட்டுக்கொன்றாலும், அந்தப் பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்தாலும், அதிகார வர்க்கம் அவர்கள் வாயில் மலத்தைத் திணித்தாலும், சாதி வெறியர்கள் அவர்கள் வாயில் சிறுநீர் கழித்தாலும் தமிழ்த் தேசியவாதிகள் காதில் போட்டுக்கொள்ளமாட்டார்கள்...
உண்மையான ஆதித்தமிழர்களான தலித்துகளின் விடுதலையைப் பொறுத்தே தமிழ்த் தேசிய விடுதலை அமைந்துள்ளது. ஆனால் சுண்டல் என்றால் தெய்வபக்தி!
இனிப்பு என்றால் தேசபக்தி!! என்ற நிலை மாறி
ஈழப் பிரச்சனை என்றால் தமிழ்ப் பற்று !!
தலித் பிரச்சனை என்றால் சாதிப் பற்று!!
என்ற நிலையை தமிழ்த் தேசியவாதிகள் உருவாக்கி விட்டனர்.
அன்றைக்கு ஆங்கிலேயர்கள் உண்மையான சுதேசியான ஆதித்தமிழனான தலித்துகளிடம் விடுதலையைக் கொடுக்காமல் விட்டதால் இன்று தமிழினம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அதுபோல இன்றைய சூழலில் தலித்துகளைப் புறக்கணித்து தமிழ்த் தேசியம் என்பது பகல் கனவே... அப்படி ஆதிக்க சாதிகளிடம் தமிழ்த் தேசியம் கிடைத்துவிடுமானால் இனி என்றைக்கும் தமிழினம் முன்னேறப்போவதில்லை, வீழ்ந்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை... தலித் விடுதலையே ! உண்மையான தமிழ்த் தேசிய விடுதலை!!

(உதவியது : அயோத்திதாசர்.இன் )

தமிழன் வேலு: சிறுத்தைகள் நடத்தும் "தக" "தக" தங்க வேட்டை !

தமிழன் வேலு: சிறுத்தைகள் நடத்தும் "தக" "தக" தங்க வேட்டை !: சூலை 11 மடிப்பாக்கம் விழாக்கோலம் பூண்டிருந்தது ! ஆங்காங்கே விளம்பர பேனர்கள், விடுதலை சிறுத்தைகளின் கட்சிக்கொடி, வாழைமரம், என்று அமக்க...

வெள்ளி, 20 ஜூலை, 2012

சிறுத்தைகள் நடத்தும் "தக" "தக" தங்க வேட்டை !



சூலை 11 மடிப்பாக்கம் விழாக்கோலம் பூண்டிருந்தது ! ஆங்காங்கே விளம்பர பேனர்கள், விடுதலை சிறுத்தைகளின் கட்சிக்கொடி, வாழைமரம், என்று அமக்கலப்பட்டிருந்தது, கட்சிக்கொடி செல்லும் திசையை நோக்கி வண்டியை விட்டேன். அது கணேசு மகாலை அடைந்தது. அங்கே திருமாவளவனின் பிறந்தநாளை கொண்டாட சிறுத்தைகள் மிக உற்ச்சாகத்துடன் காத்திருந்தனர். அங்கே திருமாவளவனுக்கு 500 கிராம் பொற்காசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பரபரப்பாய் நின்ற கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, தகடூர் தமிழ்செல்வன், நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்த மடிப்பாக்கம் வெற்றிசெல்வன் ஆகியோருடன் சில கேள்விகளை முன்வைத்தேன்...       

போராளித்தலைவரின் பொன்விழா நோக்கி பொற்காசுகள் வழங்கும் விழா என்று விளம்பரம் செய்து உள்ளீர்கள் அதற்க்கு என்ன காரணம்?
வன்னி அரசு : 
நெருப்பைக் கடப்பது எளிது !
பொறுப்பாய் நடப்பது கடிது !
புயலைக் கொண்டுவருவது எளிது !
மக்களை அமைப்பாக்குவது கடிது !
எது கடிதோ, எது முடியாதோ
அதை நிகழ்த்துதல்தான் புரட்சி !!

புது பக்கெட் வாங்கி பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது, புது செருப்பை போட்டுக் கொண்டு பொது சாலையில் நடக்க முடியாது,  சைக்கிளில் செல்ல முடியாது, நல்ல பெயர் வைக்க முடியாது நல்ல சோறு சாப்பிட முடியாது, கை நிறைய காசு இருந்தும், கொட்டாங்குச்சியில்தான் தேநீர், அது ஒரு காலம் அது நீலத் துண்டுகளின் காலம், அது மனுக்கொடுக்கும் காலம், அந்தக் காலம் இப்போது மலையேறிவிட்டது

அடங்க மறு ! அத்து மீறு !! திமிறி எழு ! திருப்பி அடி !! இந்த நான்கு வார்த்தை திருக்குறளே பொதுப் பாதையைத் திறந்து விட்டது, பொதுக் கிணற்றை உடைத்து சேரிப்பக்கம் மடை மாற்றியது, தேநீர்க் கடைகளெல்லாம் அதிர்ந்தன, தனிக் குவளைகள் உடைந்தன. 

இந்த அதிசயத்தை நிகழ்த்தியது யார்?
இந்தப் புரட்சியை நடத்திக் காட்டியது யார்? 
எங்கே அடக்குமுறை நிகழ்ந்தாலும் சமரசமில்லாமல், கொண்ட கொள்கையில் உறுதியாக போராடி வருகிறார். அதனால் தான் அவரை போராளிதலைவர் என்று அழைக்கிறோம் 

அவரின் உழைப்பை மக்கள் போற்றுதல் தானே சிறப்பாக இருக்க முடியும்? நீங்களே செய்துக் கொண்டால் அது தற்பெருமையாக இருக்காதா?

வன்னி அரசு : நாங்களும் மக்கள் தானே, நெல்லை விதைத்தால், நெல்லைத்தான் தரும் வயல், வானம் பார்த்த பூமியானாலும், கம்மங் கதிர்களும் வரகு கதிர்களும், காத்துக்கிடக்கின்றன விவசாயிகள் வருகைக்காய், முளைப்பாரித் திருவிழாவும் பெரிசுகளின் கும்மியாட்டமும், வயலுக்கும் வீட்டுக்குமாய், தானியங்கள் குவிந்து கிடக்கும்.

அந்த விவசாயிக்குத் தெரியும் நிலம் என்னுடையது பயிர் என்னுடையது உழைப்பு என்னுடையது இலாபமும் என்னுடையது, அந்த விவசாயிக்குத் தெரியும் நமக்கு நாமே திட்டத்தின்கீழ்தான்  வெள்ளாமையைப் பெருக்க முடியும் என்று...

பொன்விழாக் காணும் போராளித் தலைவரை...
காலம் முன்மொழிகிறது ! அர்ப்பணிப்பு வழிமொழிகிறது !!

இப்போது சொல்லுங்கள்
இந்த அமைப்பு என்னுடையது ! இந்த கோட்பாடுகள் என்னுடையவை !
இந்த அமைப்பின் அனைத்தும் எனக்கே எனக்கு !

நாங்களே  கொட்டுவோம் தங்கக் காசுகளை !
நாங்களே கட்டுவோம் வலிமையான அமைப்பை !
தொடர்ந்து நடத்துவோம்  தக தக தங்க வேட்டையை...  

கடந்த இரண்டு வருடமாக உங்கள் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடாமல் இருந்தீர்கள், இப்போது மட்டும் ஏன் கொண்டாடுகிறீர்கள்? 

மடிப்பாக்கம் வெற்றிசெல்வன் : இன்றைக்கு எங்கள் தலைவரை  பற்றி பல செய்திகள் போலி தமிழ் தேசியவாதிகள், சாதிய வாதிகள், இன்றும் பலர் பல பொய் செய்திகளை பரப்பி கொண்டு இருக்கிறார்கள்.அதை பலரும் நம்புகிறார்கள், பலர் புறம தள்ளுகிறார்கள்.இந்த சூல்நிலையில் தலைவரின் 50 வது பொன்விழா கூட்டம் தலைமை நிர்வாகிகள் நடத்தினோம் . தலைவர் உடனே எனக்கு பிறந்த நாள் விழா வேண்டாம் என்று இரண்டு மூன்று முறை நடக்க இருந்த கூட்டத்தை தடை செய்து விட்டார். நாட்கள் நெருங்கி கொண்டே இருந்தது பிறகு சில தலைமை நிர்வாகிகள் ஒன்று கூடி பேசி தலைவரை சந்திப்பது என்று முடிவு செய்து சந்தித்தோம். அப்போது தமிழ்நாடு முழுவதும் தம்பிகள் ஆகத்து 17 மாநாடு எங்கே எப்போது என்று கேட்கிறார்கள்.ஆகவே உடன் தகவல் சொல்ல வேண்டும் சொல்லுங்கள் என்று நிர்பந்தம் செய்தோம் அப்படியும் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் நாங்கள் விடவில்லை நான்கு மணி நேரம் மேல் போராடிய பிறகு சம்மதம் சொல்லும் வகையில் சரி நமது கட்சிக்கு என்று ஊடக பலம் ஏற்ப்படுத்த வேண்டும். அதற்கு நிதி தேவைப்படுகிறது ஆக ஊடகம் அமைக்க என் பிறந்த நாளை பயன்படுத்துங்கள் என்று சொல்லி சம்மதம் தெரிவித்தார். அதன் பின் எப்படி அதை நடைமுறை படுத்துவது நாட்கள் குறைவாக இருக்கிறதே என்று தயங்கினோம். பிறகு அவரே சொன்னார் ஆகத்து 17 வேண்டாம் இந்த ஆண்டின் கடைசியில் நடத்துங்கள் என்றார்.

  தேர்தல் தோல்வி, கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக உங்கள் கட்சியில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், யாருக்கும் பதவிகளே இல்லாத நிலையில்  எப்படி தங்கம் வசூலிப்பது சாத்தியமாகிறது?

மடிப்பாக்கம் வெற்றிசெல்வன் : எங்கள் தலைவரின் வளர்ப்பு, சிறுத்தைகளின் போராட்டக்குணம், எடுத்தக்கொண்ட லட்சியம் இவைதான் எங்களை கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறது.   மாவட்டம் தோறும் பொன்விழா கூட்டம் நடத்தி அதன் மூலமாக நிதி திரட்டுங்கள் என்று ஆலோசனை வழங்கினார். உடனே நாங்கள் எப்போதும் போல ஒரு நிதி கமிட்டி,வரவேர்ப்பு கமிட்டி, விளம்பர கமிட்டி, என்று போட்டோம்.
நிதி கமிட்டியின் மூலம் நன்கொடை அடிப்பது என்று முடிவு செய்து தலைவரிடம் சென்றோம் . அப்பொழுது தலைவர் உடனே நிதி புத்தகம் அடிக்க வேண்டாம் நமது நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். அதில் இருந்து 50 பேரை மட்டும் முடிவு செய்து one person one savaran என்று அறிவித்து மாவட்டத்திற்கு 50 சவரன் கேளுங்கள் அதன் மூலம் நிதியை திரட்டினால் போதும் சுமார் 11 லட்சம் தான் வருகிறது.ஆக மாவட்டம் தோறும கூட்டம் நடத்துங்கள் அதன் மூலம் பெரிய தொகை கிடைக்கும் அதன் மூலம் வூடகம் அமைக்கலாம் என்றார் .ஆனால் 50 சவரன் என்றதும் பெரிய தொகை போல காட்சி தந்தது பலருக்கும், உடனே தலைவர் மற்றவர்களுக்கு முன் உதாரானமாய் முதலில் தலைமை நிர்வாகிகள் நடத்துங்கள் பிறகு அதை கிழே கொண்டு செல்லுங்கள் அப்போது தான் அது வெற்றியடையும் என்று சொன்னார் உடனே நாங்கள் சென்னை T.nagar அந்த நிகழ்வை சிறப்பாக நடத்தினோம். கொடையரங்கம் தொடங்கியது தலைவர் உடனே வேகமாக மேடையேறி தன் கையில் வைத்திருந்த 10 சவரன் நகையை முகமது யூசப்பிடம் கொடுத்து எனது பெயரை அறிவியுங்கள் என்று சொன்னார். அடுத்து முக்கிய நிர்வாகிகள் அனைவரும் நிதி தந்தார்கள் இதில் என்ன விசேசம் என்ன வென்றால் எல்லோரும் தலைவருக்கு தானே தங்கம் என்று நினைத்து கொண்டு இருக்கையில் தலைவரே தங்கம் கொடுத்தது வியப்பாக இருந்தது. அப்போது தலைவர் சொன்னார் லட்சகணக்கான சிறுத்தைகளில் நானும் ஒருவன் இந்த தங்கம் எனக்காக அல்ல இது முழுக்க முழுக்க உங்களுக்காக எனது காலத்திற்கு பிறகு இந்த கட்சி வலிமையோடு செயல்பட இந்த தங்கம்பயன்படபோகிறது ஆக என்னுடைய பங்கு பத்து சவரன் ஆக நானும் இந்த கட்சிக்கு 10 சவரன் தங்கம் கொடையளிதிருக்கிறேன் என்று சொன்ன போது அரங்கமே அதிர்ந்தது. அய்யா நல்லக்கண்ணு உட்பட மகிழ்ச்சி அடைத்தனர். இப்படி தான் இந்த நிகழ்வுக்கு அச்சாரம் நிகழ்த்தப்பட்டது. அதன் தாக்கம் அடுத்தபடியாக திருவள்ளூரில் தோழர்-பாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது.அதன் பின் கடலூர் மாவட்டத்தில் திருமாறன் தலைமையில் நடைபெற்றது. அதன் பின் காஞ்சிபுரத்தில் சூ.க.விடுதலைசெழியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வை எல்லாம் பார்த்த பின் என் மனதில் ஏன் நாம் நமது பகுதியில் நடத்த கூடாது என்று கேள்வி எழும்போது அது ஆசையாக உருவானது, பெரிய பணி எப்படியும் நாம் ஒருவர் மட்டும் செய்வது என்று தயக்கம் உண்டானது, ஆனாலும் தடைகளை உடைத்து நிகழ்வை நடத்த வேண்டும் என்ற ஆற்றலை தலைவர் திருமா சொல்லி தந்ததை போல என்னோடுஎன் மனம் அறிந்து தோழமையோடு பயணப்படும் வன்னிஅரசு, தகடூர் தமிழ்ச்செல்வன் துணையோடு நடத்துவது என்று முடிவு செய்து தலைவரிடம் தேதி சொல்லி வேலையை ஆரம்பித்தேன். ஆம் அந்த நிகழ்வை தமிழ்நாட்டில் இருக்கும் சிறுத்தைகளை ஊக்கப்படுத்தும் விதமாக அமைய வேண்டும் என்ற எண்ணம என்னக்குள் இருந்தது. அதற்காக முதலில் தொலைகாட்சி விளம்பரம் செய்வது என்று முடிவு செய்து அதை சிபிச்சந்தர் மூலம் நிறைவேற்றி தம்பி செந்திலின் மூலம் கலைஞர் TV, கலைஞர் செய்திகள்,பாலிமர் செய்தி தமிழன் TV என்று ஒளிபரப்பு செய்தோம் தோழர்களே தலைவரின் பொன்விழா செய்தி பட்டி தொட்டி முழுவதும் பரவியது.அதன் பின் விளம்பரம் போஸ்டர் வானவேடிக்கை என்று மடிப்பாக்கம் அதிரும் அளவுக்கு செய்ய முடிவு செய்து பணி செய்தோம். அதே போல கொடையரங்கதிர்க்கு யாரை சந்திப்பது என்று முடிவு செய்ய ஒரு பட்டியல் தயார் செய்தேன்.அதில் ஒரு 15 பேர் வந்தது, அதில் நான் சந்தித்தது 7 பேரை மட்டுமே அந்த 7 பேரில் 6 பேர் தலித் அல்லாத எனது நண்பர்கள், அவர்களிடம் நான் சென்று தகவலை சொன்னதும் சந்தோசமாக அந்த இனிமையான சுமையை தாங்க முன்வந்தார்கள் அதில் எனது நண்பர் G.K.ரவி யாதவ சமுகத்தை சேர்ந்தவர், திரு.முருகன் அவர்கள் முதலியார் சமுகத்தை சேர்ந்தவர், திரு. சீதாபதி நாடார் சமுகத்தை சேர்ந்தவர், திரு. K.G.பாண்டியன் தேவர் சமுகத்தை சேர்தந்தவர், திரு. திலிப் கேரள மாநிலத்தவர் இந்த தோழர்கள் மேடையேறி தலைவருக்கு மரியாதை செலுத்தி தங்களின் கொடைகளை இந்த கட்சிக்கு தந்தது கண் கொள்ளா காட்சி,இந்த நிகழ்ச்சி பலரின் மனதில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது எனக்கும் மன நிறைவை தந்தது. நிகழ்ச்சியின் மூலம் எனக்கும் கொஞ்சம் பொருளாதார சிக்கல் ஏற்ப்பட்டது. அதையும் தாண்டி இந்த நிகழ்ச்சியின் வெற்றி என்னை மனம்நிரைவாக்கியது .நிகழ்ச்சி முடிந்து தலைவர் அவர்கள் என் இல்லத்திற்கு வந்து உணவு அருந்தி என் குடும்ப உருபினர்களோடு உரையாடி சுமார் இரண்டு மணி நேரம் எங்களோடு இருந்தது மிக மிக சந்தோசமான தருணம் அந்த சந்தோசம் இந்த நிகழ்ச்சி வேலை பளுவை இலகுவாக்கிவிட்டது. மடிப்பாக்கம் நிகழ்ச்சியின் மூலம் வந்த கொடையின் மூலம் கட்சிக்கு 3 கிலோ தங்கம் கிடைத்து இருக்கிறது என்ற செய்தி கட்சியின் அணைத்து சிறுத்தைகளுக்கும் சந்தோசம்ஏற்பட்டது .ஆம் சீக்கிரம் நமக்கான ஊடகம் கிடைத்துவிடும் நம்பபிக்கையில் இன்னும் வேகமாக பயணம் செய்கிறார்கள். இதோ வருகின்ற 25ம் தேதி வேலூரிலும்,1ம் தேதி போரூர் பகுதியிலும், வரும் 5ம் தேதி மகாபலிபுரதிலும் விழா நடத்த ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டு இருக்கின்றது.உடனே வூடகங்கள் திருமா ஏழை மக்களிடம் தங்கம் கேட்கிறார் மாயாவதியை போல என்று நஞ்சை விதைக்கிறார்கள் ஆனாலும் சிறுத்தைகள் தங்களின் தலைவன் வாக்கே வேத வாக்கு என்று தங்க தலைவனுக்கு தங்கத்தை அள்ளி தருகிறார்கள் ... 

உங்கள் தலைவரின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர் அரசியலுக்கு வந்த பின்பு மாற்றம் ஏதேனும் நிகழ்ந்து உள்ளதா? 

மடிப்பாக்கம் வெற்றிசெல்வன் : ஒரு முறை நான் தலைவருடன் அங்கனுர் சென்றேன். தலைவர் வீட்டு வாசலில் நான் அமர்ந்து இருந்தேன்.அப்பொழுது தலைவரின் அம்மா பெரியம்மா என் அருகில் வந்து தரையில் அமர்ந்தார். நான் என்ன அம்மா எப்படி இருக்கிறிர்கள் என்று கேட்டேன் உடனே அம்மா வருத்தமாய் ஆரம்பித்தார்கள் இங்கே எனக்கு செலவுக்கு பணம் இல்ல, சென்னையில அக்கா பானுமதி சின்ன ரூம்ல இருக்கா அவளும் கஷ்டப்படுறா சாப்பாட்டுக்கே இல்லாம கண்ணீர் விடுறா அதை பார்க்க பார்க்க எனக்கு வேதனையா இருக்கு இவ்ளோ பெரிய தலைவர் இவரு ஆனா எங்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டேன்றாரு நீயாவது சொல்ல கூடாதா? என்று கேட்ட அந்த வார்த்தை என்னை குத்தியது.உடன் அம்மா கேட்டாங்க அவர் அரசு வேலையால் இருந்து இருந்தா எவ்வளவோ பணம் கிடைச்சு இருக்கும். அதை வைச்சு நாங்க நல்லா இருந்து இருப்போம்.ஆனா இப்போ எங்களுக்கு எந்த பலனும் இல்லை. கஷ்டபடுறோம் நீங்க எல்லாம் சேர்ந்து என் புள்ளைக்கு ஒரு சம்பளம் போட்டு தரக்கூடாதா என்று கேள்வி எழுப்பினார்??. எனக்கு அதற்க்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை?. அப்படியே மழுப்பி ஆகட்டும் பார்க்கலாம்அம்மா என்று சொல்லி நகர்ந்தேன் ஆனாலும் அந்த வருத்தம்,கேள்வி என்னை தொல்லை செய்து கொண்டே இருந்தது. தலைவர் கிளம்பலாம் என்று சொல்லி காரில் ஏறியதும் அம்மா ஓடி வந்தார் அழுகையோட காசு தந்துட்டு போ என்று கேட்க அண்ணன் எப்போதும் போல பாக்கெட் தடவி இல்லையே என்றார். அம்மாவுக்கு கண்ணீர் பொத்து கொண்டு வந்து விட்டது உடனே என்னை திரும்பி பார்த்தார். நான் கொஞ்சம் பணத்தை அள்ளி எடுத்தேன் அதில் 1000,500, 100 ருபாய் தாள்கள் நிறைய இருந்தன ஆனால் தலைவர் அதில் இருந்து இரண்டு நூறு ரூபாய் தாள்களை மட்டும் எடுத்து மடக்கி கையில் திணித்து நிறைய செலவு செய்யாத அம்மா என்று சொல்லி நகர்ந்தார். அந்த பணம் வெத்தலை பாக்கு போட ஒரு வார செலவுக்கு கூட போதாது எனபது தான் உண்மை ஆனாலும் அதை பெரிய தொகையாக சொல்லி அம்மாவிடம் தந்தார்.எனக்கு ஆச்சர்யம் வியப்பு இப்படியும்ஒரு மனிதர் இருக்க முடியுமா? என்று இன்று வரை அதே ஆச்சர்யத்தோட பயணம் செய்கிறேன்.இன்று தலைவர் ஒரு வார்த்தை சொன்னால் அதை நிறைவேற்ற ஆயிரகணக்கான சிறுத்தைகள் காத்து இருக்கிறது ஆனாலும் அவர்களை பொது வேலைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார் ஒரு போதும் தன் குடும்பதிர்காகவோ தனக்காகவோ பயன்படுத்துவது இல்லை .அதே நேரத்தில் வேறு நபர்கள் உதவி என்று வந்து விட்டால் உடனே அதை யார் மூலமாகவது நிறைவேற்றி அனுப்பி வைப்பார் .அண்ணன் திருமா நாம் அனைவரும் படிக்கவேண்டிய பாடம் பாதுகாக்கவேண்டிய பெட்டகம் தோழர்களே .. அவரோடு அடுத்து ஒரு நிகழ்வு, ஐயா தொல்காப்பியன் அவர்கள் உடல் நிலை மிக மோசமாகஇருந்த நிலையில் ராமச்சந்திரா மருத்துவ மனையில் இருந்த போது தலைவர் அங்கேயே தங்கி இருந்தார்.அவருடன் நெய்வாசல் ரவி என்பவர் பணிவிடை செய்து கொண்டு இருந்தார் அப்போது நான் காலையில் அங்கு சென்று விடுவேன்.தலைவர் ஐயா அவர்களுக்கு உணவு ஊட்டுவார் அவரால் சாப்பிட முடியாது சின்ன கரண்டில எடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் உணவு கொடுப்பார் அப்போது தலைவரின் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்து அவரின் மேல் விழும் என்னை அந்த நிகழ்ச்சி உசுப்பியது. நாடே அவரை மிகப்பெரிய சிம்மசொப்பனமாய் பார்க்குற நிலையில் தலைவர் இப்படி கண்ணீர சிந்துகிறாரே என்று எனக்குள் கேள்வி. இறப்பு எல்லாருக்கும் சகஜம் தான் அதை நினைத்து தலைவர் அழுகுறாரே என்று கேள்வி எழுந்தது. மருத்துவ மனையிலேயே பல நாட்கள் தலைவர் அவர் தந்தையை பார்த்துக்கொண்டார். அவர் ஐயா மீது வைத்த பாசம் என்னை சுட்டது இப்படியும் மனிதர் இருக்க முடியுமா என்ற ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியது தினம் தினம் டாக்டர். சௌந்தராஜன் வந்து பார்த்து கொள்வார் ஒரு நாள் நான் தலைவர் ரவிஅண்ணன் சௌந்தராஜன் இருக்கும் போது மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஐயா உயிர் மறைந்து விடும் ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று சொன்னதும் அண்ணனுக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது. அந்த பதட்டம் எல்லோருக்கும் தொற்றிக்கொண்டது உடனே சௌந்தராஜன் அண்ணன் வெற்றி தலைவரை அழைத்து கொண்டு போகலாம் வாருங்கள் என்று சொல்லி காரில் ஏறினார் எங்கே போவது என்று தெரியாமல் பயணம்? உடனே தலைவர் வேளச்சேரி போங்கள் என்று சொன்னார் அங்கே யாரும் இல்லை. தமிழேந்தி அவர் மனைவி மட்டும் இருந்தார்கள் அவர்களிடம் யாரையும் தலைவரை பார்க்க அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டு பக்கத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்று அமர்ந்தோம்.அங்கே மயான அமைதி தலைவரின் முகத்தில் அதிக பட்ச சோகம் அப்பிக் கொண்டு இருந்தது.அமைதியாக இருந்தது.உடன் அண்ணன் சௌந்தராஜன் தம்பி நமக்கான உறவுகள் எல்லோரும் ஒரு நாள் போய் தான் ஆகவேண்டும் நீங்கள் கவலை பட கூடாது என்று அண்ணன் தோளில்கை வைத்தார் உடனே நான் எப்போதும் கம்பீரமாய், சிறுத்தையாய், எதற்கும் அஞ்சாத சிங்கமாய் பார்த்து ரசித்த அந்த மாமனிதன் உடைந்து அழுத காட்சி என் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாது ஆம் தோழர்களே! அந்த அழுகையுடன் அவர் சொன்ன அந்த வார்த்தை மறக்கவே முடியாது. மருத்துவரை பார்த்து அண்ணா என் தந்தைக்கு நான் ஒரு வேளை உணவு கூட போடவில்லை நல்ல துணிமணிகள் எடுத்து தரவில்லை நல்ல செருப்பு வாங்கி தரவில்லை அவரை சந்தோசமாக வாழ வைக்க வில்லை அவரின் ஆசை நான் திருமணம் செய்ய வேண்டும் என்று அதையும் நிறைவேற்றவில்லை இப்படிபட்ட பிள்ளையை பெற்று அவர் எந்த சுகத்தையும் காணவில்லை நான் கொடும் பாவம் செய்துவிட்டேன் பெற்றவர்களுடைய கடனை செலுத்த முடியாத பாவியாகி விட்டேன் என்று சொல்லி சொல்லி அழுத காட்சி என்னை உலுக்கியது.மருத்துவ மனையில் அவர் விட்ட கண்ணீருக்கு பதில் இப்போதுதான் கிடைத்தது அந்த அழுகையுடனே என் தந்தை என்னை வளர்க்க கஷ்டப்பட்டார் ஆனால் அவருக்காக நான் எதையும் செய்யவில்லை என்னை பார்க்க பல முறை சென்னை வந்து பார்க்க முடியாமல் திரும்பி இருக்கிறார் அதனால் கூட்டம் நடக்கும் இடத்திற்கு லட்சகணக்கான சிருதைகளோடு அவரும் தூர இருந்து பார்த்து விட்டு போய்விடுவார் பிறகு தம்பிகள் சொல்லும்போது தான் எனக்கும் தெரியும் அவருக்கான நேரத்தை நான் தரவே இல்லை இப்படி ஒரு தந்தைக்கு செய்யும் சாதாரண கடமையை கூட நான் செய்யவில்லை என்று சொல்லி அந்த குற்ற உணர்ச்சி என்னை கொள்கிறது என்று சொல்லி அழுதபோது மருத்துவர் உள்பட நானும் கலங்கி விட்டோம் , அந்த தருணம், நொடி என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அப்படி பட்ட அய்யா தொல்காப்பியன் அய்யா இறந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது இன்று வரை அதன் வலிகளோடு பயணம் செய்யும் மகத்தான தலைவன் தான் அண்ணன் திருமா ஆம் அவர் இப்போதும் தன் குடும்பத்திற்காக எதையும் செய்யாத மகனாக தான் இருக்கிறார். அவரின் தம்பி பாரி வேளச்சேரி அலுவலகத்தில் ஒரு சாதாரண தொண்டரை போல அங்கே இருக்கும் வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார் எல்லோரும் சந்திக்கும் நேரத்தில் தான் அவரும் முண்டியடித்து தன்னுடைய கோரிக்கையும் வைப்பார். அப்படி தான் தலைவர் அவர்கள் தன் குடும்பத்தை நடத்துகிறார்.... அம்மா சொன்னதை போல தலைவர் அரசு பணியில் இருந்து இருந்தால் அவர்களும் சந்தோசமாக இருந்து இருக்கலாம் ஆனால் இந்த சமூகத்துக்காக தன்னை தியாகம் செய்து விட்டதால் குறைந்த பட்ச ஆசைகளை கூட அவர் அவர்களுக்காக நிவர்த்தி செய்யவில்லை என்பது வருத்தம் தர கூடிய விஷயம் . இப்படி சுயநலம் அற்ற ஒரு தலைவன் பின்பற்றும் சிறுத்தைகள் அவரை போல இருக்கிறோமா ???? கேள்வி தான் ??? அவரின் கடமைகளை நாம் நிறைவேற்றுவோம் அப்போது தான் நாம் விசுவாசம் நன்றி உணர்ச்சி உள்ள மனிதர்கள் ஆவோம் ...அவருக்கான கடமை நமக்கான கடமை என்று ஏற்று கொள்வோம் ....
தோழர்களே, நம்ம்க்காக அடிமை விலங்கை உடைக்க தலை நிமிர்வை உருவாக்க காலம் நேரம் பார்க்காமல் உழைத்து தலை நிமிர்வை உருவாக்கிய தலைவர் தான் அண்ணன் திருமா இப்படி தன்னை பெற்ற தாய்க்கு செலவு செய்யாத, தந்தைக்கு செலவு செய்யாத உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு கடமையை செய்ய முடியாமல் தவிக்கும் ஒரு பிள்ளைதான் இந்த சமூகத்திற்காக தன்னையும் தன் இளமையையும் தியாகம் செய்த அந்த உத்தம தலைவர் தான் அண்ணன் "திருமாவளவன் " . கட்சிக்கு இன்று பல லட்சங்கள் இருந்தாலும் அதை தன் குடும்பத்திற்காக செலவு செய்யாத நேர்மையான தலைவன் தான் அண்ணன் திருமா.

தங்கம் திரட்டி என்ன செய்யப் போகிறீர்கள்? 
மடிப்பாக்கம் வெற்றிசெல்வன் :  எங்கள் மீது சுமத்தப்படும் அவதூறுகளை முறியடிக்கவும் ஊடகம்(தொலைகாட்சி) தேவைப்படுகிறது. அதற்காக போராளித்தளைவரின் பொன்விழாவில் பொற்காசுகள் வழங்குகிறோம்.எங்களை வலிமைப்படுத்துக் கொள்ளமட்டும் அல்ல. தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் படும் அவலங்களை தோலுரிக்கவும் தொலைகாட்சி தேவைப்படுகிறது. தன்னை பெற்ற தாய்க்கு செலவு செய்யாத, தந்தைக்கு செலவு செய்யாத உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு கடமையை செய்ய முடியாமல் தவிக்கும்  அண்ணன் திருமா இன்று தங்கம் கேட்கிறார் எதற்காக அவரின் குடும்பத்திர்காகவா,தனக்காகவா இல்லை. நமது கட்சிக்கு நமக்கு ஊடகம் அமைக்க கேட்கிறார் நாடு முழுவதும் உள்ள தலித்துகளின் தலை நிமிர்வை உருவாக்க கேட்கிறார்.ஆகவே தோழர்கள்  தலைவரின் பிறந்த நாளை அடையாளப்படுத்தி நாடெங்கிலும் அவரின் விழாவை சிறப்பாக நடத்தி ஊடக வலிமையை உருவாக்குவோம். தலைவரின் கனவை நினைவாக்க தங்கத்தை அள்ளித்தருகிரார்கள். இந்த சமூகத்திற்காக நமக்காக தமிழ் தேசிய மக்களுக்காக தன் வாழ்க்கையே தியாகம் செய்த மாமனிதருக்கு புகழ் மாலை சூடுவோம். அவரின் உயர்ந்த லட்சியங்களை,நினைவுகளை, கனவுகளை நினைவாக்குவோம். என்றும் அவரின் பாதையில் பயணிப்போம்...

ஊடகங்களின்  ஆதரவு  இல்லாமல் தான் இத்தனை ஆண்டுகாலம் பயணம் செய்கிறீர்களா? அதற்க்கு சாட்சியங்கள் உண்டா?
தகடூர் தமிழ்செல்வன் : நிச்சயமாக சொல்கிறேன் ஊடகங்கள் எங்கள் செய்தியை இரட்டிப்பு செய்கின்றன. இல்லையென்றால் சிறுமை படுத்துகின்றன. தனுஷுக்கும் , கலமஹாசன் பொண்ணுக்கும் கள்ளக்காதலாம், அதை அட்டைப்படத்தில போட்டு எழுதுகிறார்கள் . ஆனால் இன்று இந்தியா முழுமைக்கும் 85 சதவிகிதம் தனியார் மயமாகிவிட்டது. மீதமுள்ள 15 சதவிகிதமும் விரைவில் தனியார் மயமாகிவிடும். எனவே தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் அதற்க்கு மத்திய அரசு தனி சட்டம் உருவாக்க வேண்டும் என்று முழங்கினார் திருமாவளவன் அதை யாரும், எந்த பத்திரிக்கையும் எழுதவில்லை.

ஐஸ்வர்யா ராய்க்கு பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று ஆறுவாரம் கருத்து கணிப்பு போட்டார்கள் . ஆனால் அண்டை நாட்டில் நடக்கும் கொடுமை கண்டு, ஈழத்தை எதிர்க்கும் இந்திய அரசின் குகைக்கே சென்று தனி ஈழமே தீர்வு என்று எழுந்து முழங்கினார் திருமாவளவன், இந்தியாவில் புலிகளுக்கு தடை விதித்த பின்பு நாடாளுமன்றத்தில் ஈழமே தீர்வு என்று முழங்கிய ஒரே தமிழன் திருமாவளவன்  அதை யாரும்  அரை வரிக்கூட எவனும் எழுதவில்லை.... 

மது பார்டியில் நடிகைக்காக நடிகர்கள் அடித்துக்கொண்டனர் என்று  ஆரவாரமாக எழுதுனவனுங்க, ரயில்வே பட்ஜெட் விவாதத்தில் ரயில் கட்டணத்தை குறைத்ததும் அனைத்து உறுப்பினர்களும் அமைதி காத்தாலும், மனித மலத்தை மனிதனே அல்லும் கேவலம் இந்திய நாட்டை தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று கூறி வெளிநடப்பு செய்த திருமாவளவனை பற்றி ஒரு பெட்டி செய்தி கூட இல்லை... 

நயன்தார பிரபுதேவா சண்டை, நமீதாவுக்கு எப்போது கல்யாணம் என்று மைக்கை தூக்கி கொண்டு நடிகர்கள் பின்னாடி அலையும் பத்திகையாளர்கள், ஆறுகோடி தமிழர்களுக்காக 60 லட்சம் தமிழர்களை கூட்டி, அவர்கள் முன்னிலையில் மக்களுக்காக உழைத்த ஆன்றோர்களுக்கு விருதுகள் வழங்கினால், தினத்தந்தியை தவிர ஒரு செய்திதாள்களிலும், காணவில்லை, ஒரு டிவி செய்தியிலும் காணவில்லை...

சச்சின் வான்கடே மைதானத்தில் நூறாவது சதம் அடிப்பார நு ஒரு பக்கம் முழுமைக்கும் எழுதுனுவங்க, விழுப்புரம் வானூரில் நடந்த கொடுமையை ஒருவரிக்கூட எழுதவில்லை, அதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த விடுதலை சிறுத்தைகளை பற்றி யாரும் எழுதவில்லை. 

நாட்டு மக்களுக்காக பிரதமர் ஒரு திட்டத்தை அறிவித்தார் என்று செய்தி போட்டு, அதன் அருகிலே கலர் போட்டோ போட்டு கள்ளக்காதலை மறக்க முடியாத மனைவி கணவரின் தலையில் அம்மிக் கல்லை தூக்கி போட்டாள் என்று எழுதுகிறார்கள். இந்த செய்தி அந்த செய்தியை மறைக்கிறது... 

திருமாவளவன் ஏன் ராஜபக்ஷேவை சந்தித்தார் என்று எழுதியவர்கள் அங்கே என்ன நடந்தது என்பதை எழுதவில்லை. ராஜபக்ஷே கனிமொழியிடமும், டி.ஆர் பாலுவிடமும் இவர் பிரபாகரனுக்கு நெருக்கமானவர், அந்த நேரத்தில் இவரும் அந்த இடத்தில் இருந்து இருந்தால் இவரும் போயிருப்பார் என்று சொல்லி சிரித்தான். அதன் பொருள் என்ன? பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறார் என்று குறை சொல்கிறவர்கள்,எழுதுபவர்கள்  தமிழகத்தில் நடக்கும் சேரிக் கொலைகளை கண்டிப்பதில்லை. திருமாவளவன் மீதும், விடுதலை சிறுத்தைகள் மீதும் திட்டமிட்டே அவதூறு பரப்பும் போக்கை முறியடிக்க ஊடக வலிமை தேவைப்படுகிறது. அதற்க்கு பொருளாதார வலிமையையும் தேவைப்படுகிறது. எங்கள் கட்சிக்கு நிதி வேண்டும் என்று நாங்கள் யாரிடமும் கேட்கவில்லை. அப்படி கேட்டாலும் யாரும் தரமாட்டார்கள். ஆக எங்கள்  வீட்டை  நாங்களே கட்டுகிறோம், நாங்களே நிதி திரட்டுகிறோம். எங்களிடம் இருக்கும், நாங்கள் வியர்வை சிந்தி உழைத்த அஞ்சு ரூபாயிலும், பத்து ரூபாயிலும் வீட்டைக் கட்டிக் கொள்கிறோம். எங்கள்  போராட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லவும், எங்கள் மீது சுமத்தப்படும் அவதூறுகளை முறியடிக்கவும் ஊடகம்(தொலைகாட்சி) தேவைப்படுகிறது. அதற்காக போராளித்தளைவரின் பொன்விழாவில் பொற்காசுகள் வழங்குகிறோம்.      

இப்போதுக்கூட ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் லட்சுமிபேட்டையில் சாதி வெறியர்களால் ஐந்து தலித்துகள் கொடூர கொலை பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதைப்பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லை. தலித்துகள் மீது நடக்கும் கொடுமையை கண்டித்து எழுதவும் பத்திரிக்கை இல்லை, அதை கண்டித்து போராடும் போராளித்தளைவரின் போராட்டங்களை பொதுமக்களிடம் கொண்டுசெல்லவும் பத்திரிக்கை இல்லை. இன்று இந்தியா முழுமைக்கும் தலித்துகளுக்காக போராடும் ஒரு அமைப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் லட்சுமிபேட்டையில் திருமாவளவன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் தம் கண்டனங்களை பதிவு செய்துவிட்டு வந்துள்ளார். எந்த பத்திரிக்கை காரன் அதைப்பற்றி எழுதினான். அதற்காகவே எங்களுக்கு ஊடக வலிமை தேவைப்படுகிறது. எங்களை வலிமைப்படுத்துக் கொள்ளமட்டும் அல்ல. தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் படும் அவலங்களை தோலுரிக்கவும் தொலைகாட்சி தேவைப்படுகிறது.  

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அறிவை தேடவும், அதிகாரத்தை நாடவும் கூட ஒன்றுபடமுடியாமல் கிடந்த எங்களுக்கு ஆயிரக்கணக்கான சிறுத்தைகளை கூட்டி பொன்விழா நடத்தும் அளவுக்கு வலிமையை தந்த போராளித்தலைவருக்குஆயிரம் ஆயிரம் பொற்காசுகள் வழங்கினாலும் தகும்.

நடக்க தெரியாத குழந்தையை தாய் கரம் பற்றி நடக்க சொல்லித்தருவதைப்போல அதிகாரத்தை நோக்கி நகர முடியாமல் கிடந்த எங்களை கரம்பற்றி தாயை போல அழைத்து செல்லும் போராளித்தலைவருக்கு ஆயிரம் ஆயிரம் பொற்காசுகள் வழங்கினாலும் தகும்...

பொற்காசுகள் வழங்கும் விழாவில்  திருமாவளவன் பேச்சின் ஒரு பகுதி :  

என்னுடைய  இத்தனை ஆண்டு உழைப்பை பற்றி எழுத முடியாதவர்கள் இன்று என் பிறந்தநாளுக்கு தங்கம் வசூலிக்கிறேன் என்றதும் வரிந்து கட்டிக் கொண்டு விமர்சனம் பண்ணுகிறார்கள். ''இப்படி விமர்சனம் வரும் என்று தெரியும். கட்சித் தொண்டர்கள் அனைவரும் தர வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை. இயன்றவர்கள் மனமுவந்து தருவதை மட்டுமே, அதுவும் நகையாக அல்லாமல் தங்கக் காசுகளாக மட்டுமே, ரசீதுடன் பெற்றுக்கொள்கிறோம். இப்படிப் பெறப் படும் ஒவ்வொரு கிராம் தங்கமும் கட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு மட்டுமே செலவிடப் படும். நான் 11 ஆண்டுகள் அரசு ஊழியராக இருந்து சம்பாதித்த காசில்கூட, என் அம்மாவுக்கோ அக்காவுக்கோ நகை வாங் கியது இல்லை. அவ்வளவையும் கட்சிப் பணிகளுக்குத்தான் செலவிட்டேன். பணமாகப் பெறுவதைவிட தங்கமாகப் பெறுவது எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே!''

ஒரு இயக்கம் வலிமையாக செயல்பட கொள்கை வலிமை மட்டும் போதாது, பொருளாதார வலிமையையும் தேவைப்படுகிறது. பெரியாரின் மறைவுக்குப் பின்னும் அவருடைய இயக்கம் இன்னமும் வலிமையாக செயல்பட அவரது கொள்கைகள் மட்டும் காரணமல்ல, அவரது இயக்கத்தின் சொத்தும் ஒரு காரணம். 13 ஆண்டுகாலம் ஆட்சியைப் பற்றிக் கனவுக்கூட காணமுடியாமல் இருந்த தி.மு.க பதிமூன்று ஆண்டுகாலம் எப்படி தாக்குபிடிக்க முடிந்தது? கொள்கை வலிமையுடன் இருந்த பொருளாதார வலிமையாலே...

தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. கட்சிகளுக்கு எனப் பிரத்யேக சேனல்கள் இருக்கின்றன. இடதுசாரிக் கட்சிகள் ஓர் ஆர்ப்பாட்டம் செய்தால், அது ஒரு செய்தியாகவேனும் பதிகிறது. ஆனால், நாங்கள் நடத்தும் பொதுக் கூட்டமோ, பிரமாண்ட மாநாடோ எதுவுமே பொதுமக்களைச் சென்று சேர்வதே இல்லை. அதனாலேயே எங்களுக்கு என்று தனி சேனல் தொடங்குவது அவசியம் ஆகிறது. சேட்டிலைட் சேனல் துவங்க 20 கோடி ரூபாய் சொத்து மதிப்பும் 5 கோடி ரூபாய் வங்கிக் கணக்கிலும் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. அதற்காகத்தான் என் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு கட்சித் தொண்டர்களிடம் பொற்காசுகளை நன்கொடையாகப் பெறுகிறோம்!'' ஊடக வலிமை இல்லாமல் அரசியல் களத்தில் நிர்ப்பது ஆயுதமின்றி போர்க்களத்தில் நிர்ப்பதர்க்கு சமம். எங்களுக்கு என்று ஊடகம் தேவைப்படுகிறது. நிதியை தங்கமாக வசூலிக்கிறோம். நான் ஒன்றும் மாடமாளிகையில் பிறந்தவன் அல்ல, நிலச்சுவான்தாருக்கு பிள்ளை அல்ல, பெரும் பண முதலாளிக்கு வாரிசு அல்ல, நானும் அன்றாடம் காய்ச்சி தான், நானும் ஆடு மாடு மேய்த்து இருக்கிறேன், உழைப்பின் வலி எனக்கும் தெரியும். விறகுகளை வெட்டி, அதை தலையில் சுமந்துக் கொண்டு காலில் செருப்பு இல்லாமல் கடும் வெயிலில், கடும் பொடியில்  எட்டுக் கிலோமீட்டர் தூரம் சென்று விற்று வந்துள்ளேன். ஏழைகள் வலியை நான் உணர்வேன். இந்த தங்கம் எனக்கு அல்ல. எம் மக்களாகிய உங்களுக்குத்தான் சொத்து சேர்க்கிறேன். அதனால் தான் நானும் என் பங்கிற்கு பத்து சவரன் தங்கம் கொடுத்துள்ளேன்.கருணாநிதி கேட்டால் தங்கத்தில் நாற்காலி செய்து தருவார்கள், ஜெயலலிதா கேட்டால் தங்கத்தில் கழிவறையே செய்து தருவார்கள். ஆனால் எம் மக்களால் அது முடியாது. நான் மாயாவதியை பின்பற்றுவதாக சொல்கிறார்கள், இதுவரை நான் நேரில் அவரைப் பார்த்தது கூட கிடையாது. எனக்கென்று அரசியல் குருக்கள் யாரும் கிடையாது. அரசியல் செய்ய யாரும் சொல்லித்தரவில்லை. நம்மை எல்லாம் மனிதராக்கிய மகத்தான தலைவர் புரட்சியாளர் அம்பேத்கரின் வழி நடக்கிறோம். எங்களுக்கு அடையாளம் அம்பேத்கர், மாயாவதிக்கு அடியாளம் அம்பேத்கர். அவ்வளவுதான் எனக்கும் மாயாவதிக்கும் உள்ள உறவு. 1941 ஆம் ஆண்டு புரட்சியாளரின் 50 ஆவது பிறந்தநாளுக்கு பவுன் தங்கம் மக்கள் கொடுத்துள்ளார்கள். அதை அவர் 10 ஆயிரத்துக்கு விற்று கட்சிப் பனி ஆற்றி உள்ளார்.  என்று எனக்கு ஒரு நண்பர் செய்தி அனுப்பினார். அந்த வழியில் தான் நாங்கள் தங்கம் வசூலிக்கிறோம். இந்தியாவிலே ஒரு தலித் அமைப்புக்கு பொருளாதார வலிமையைக் கூட்டி சொத்தை சேர்த்து வைக்கும் முதல் தலித் இயக்கம் என்ற பெருமையும் நமக்கிருக்கிறது.நம்முடைய போராட்டங்களை, புரட்சிகளை பற்றி பேசாதவர்கள், இன்று அவதூறு பரப்பும் நோக்கில் செய்தி வெளியிடுகிறார்கள். அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். மாவட்டம் தோறும் தங்கவேட்டையை நடத்துங்கள்....

                                             ........................

அவர்களின் ஆதங்கம் நியாயமானது. விடுதலை சிறுத்தைகளின் செய்திகள் இரட்டிப்பு செய்யப்படுவது உண்மையே என்றாலும், தங்கம் வசூலிக்கும் போது யாரும் இரையாகாமல்  சந்தோசப்படுவோம். ஒரு உண்மையை நாமும் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும், தமிழக அரசியலில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் உருவான தலித் இயக்கம் இவ்வளவு வலிமையாக நிற்பது  இதுவே முதல்முறை. தேர்தல் தோல்விகளால் நாங்கள் சோர்ந்து போகமாட்டோம் என்பதை விடுதலை சிறுத்தைகள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். வாழ்த்துக்கள் திருமா உங்கள் பொன்விழாவுக்கும் ! உங்கள் கட்டுமானப் பணிக்கும் !! 

தொகுப்பு :
அங்கனூர் தமிழன்வேலு