திங்கள், 8 ஜூலை, 2013

முதலில் ...

இன்றுதான் புதிதாக அல்ல
நேற்றைக்கும் நடந்தது

இன்றோடு நின்றுவிடப் போவதுமல்ல
நாளைக்கும் நடக்கும்

இது உள்நாட்டுப் போர் தான்
நம் எதிராளி
சாதியவாதிகள் மட்டுமல்ல
அரசு எந்திரங்களும் தான் ...

தொடர் வன்கொடுமை
தாக்குதலிகளில் சிக்கி
சிதறுண்டுப் போகும் மக்களுக்கு
கண்டன அறிக்கைகளும்
கண்டன கூட்டங்களும் தான்
தீர்வாகுமா? என்பதை
தீர்மானித்துக் கொள்ளுங்கள் !

- தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக