செவ்வாய், 9 ஜூலை, 2013

அமைதிக்குப் பின்னால் புயல் !

புயலுக்குப் பின்னால் அமைதியென்று
சொல்லுவார்கள் - இன்றைக்கு
சிறுத்தைகளின் அமைதிக்குப் பின்னால்
புயலொன்று காத்திருக்கிறது !

புயல் எச்சரிக்கை விடப்பட்டது
பெரியார் திடலில்...

இந்தப் புயல் உழைக்கும் மக்களின்
உடைமைகளை சூறையாட அல்ல;
உழைக்கும் மக்களின் உடைமைகளுக்கு
தீ வைக்கும் சாதியத்தை சூறையாடிடவே !

எளிய மக்களின் உணர்வுகளை
உசுப்பி வாக்கு வங்கியை வலுப்படுத்திக்
கொள்வதற்கு அல்ல; எளிய மக்களின்
உணர்வுகளை சீராக்கி, சமூக அமைதியை
நிலை நாட்டிடவே !

புளுகுப் புராணங்களை சொல்லி, அப்பாவி
இளைஞர்களை வன்முறையாளர்களாக
உருவாக்க அல்ல; புளுகாண்டிகளின்
வெறுப்பு பிரச்சாரத்தை முறியடித்து
வேற்றுமைகளை களைந்து உழைக்கும்
மக்களின் ஒற்றுமையை நிலை நாட்டிடவே !

சேரிப்புயல் சுற்றி சுழற்றி அடிக்கும் - அதில்
சாதியவாதிகள் சிக்குவார்கள்
சாமானியர்கள் தப்புவார்கள் !

சாதியம் இரையாகும்
சமத்துவம் சாத்தியமாகும் !

தமிழர் விரோதம் பலியாகும்
தமிழர் இறையாண்மை உருவாகும் !

- தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக