சனி, 9 மார்ச், 2013

குற்றங்கள் குறைய மரணதண்டனை தீர்வல்ல


கூடு இயக்கம் நடத்திய மடியட்டும் மரண தண்டனை 

பொதுக்கூட்டத்தில் நான் பேசியது :-

* என் கண்ணை குத்தியவனுக்கு தண்டனையாக அவனது கண்ணைத்தான் குத்த வேண்டும் என்றால் அதை நானேசெய்து விடுவேனே? அதற்கு ஏன் அரசும்? சட்டமும்? நீதிமன்றமும்? 



* உலகில் பல்வேறு நாடுகள் மரணதண்டனையைமறு பரிசீலனை செய்கிறார்கள், ஆனால் இது காந்தி பூமிஎன்றும், காந்தியின் அஹிம்சா தான் இந்தியாவுக்கு பெருமை என்றும் சொல்கிற இந்திய அரசு மரணதண்டனை முறையை பின்பற்றலாமா? அப்படியானால் காந்தியின் அஹிம்சாவும் இப்படித்தான் மக்களை இம்சிக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

* காந்தி மரணதண்டனையை எதிர்த்ததாக சொல்கிறார்கள்.ஆனால் 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் நாள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற மாவீரர்களை தூக்கில் இடுவதற்கு முன்னர் காந்தியிடம் நிருபர்கள் "பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் 
போன்றவர்களின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையை குறைக்கப்படுமா? என்ற கேள்வி கேட்கிறார்கள் " அப்போது காந்தி இது பற்றி என்னிடம் கேட்காமல் இருப்பதே மேல் என்றும், நான் இது பற்றி பேச விரும்பவில்லை என்றும் கூறி இருக்கிறார். மேலும் "அவர்கள் வாழ விரும்பவில்லை" என்று அவர்கள் கூறியதாக கூறி இருக்கிறார். இதன் மூலம் மரணதண்டனைக்கு காந்தியும் உடைந்தையாக இருந்திருக்கிறார். 

* மரண தண்டனைக்கு தூக்கு கயிற்றை பயன்படுத்துகிறார்கள். அந்த தூக்கு கயிற்றின் முடிச்சு தான் பார்ப்பனியம், காந்தியம், இந்தியம். குற்றம் இழைத்ததாக கூறி நீதிமன்றம் கொடுக்கும் தண்டனைகளை மட்டும் மரணதண்டனையாக கருதவில்லை; சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் உண்டாகும் கலவரத்தில் அப்பாவி மக்கள் சாகடிக்கப்படுவதும், அவர்கள் வாழ்வாதாரம் சீரழிக்கப்படுவதும் மரணதண்டனை தான். இதை தடுக்க அரசுக்கு துப்பில்லை.

* கடந்த 18 ஆண்டுகளில் இதுவரை இந்தியாவில் 4 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். அவர்கள், 1 சீக்கியர், 2 இசுலாமியர்கள், 1 தமிழர், போதாக்குறைக்கு இப்போது 7 தமிழர்களை தூக்கிலிட துடிக்கிறார்கள். இது இந்தியாவின் இந்துத்துவ மனப்பான்மையை காட்டுகிறது. சீக்கியர்களும் இந்துத்துவத்தை எதிர்த்தார்கள், இசுலாமியர்களும் இந்துத்துவத்தை எதிர்த்தார்கள், தமிழர்களும் இந்துத்துவத்தை எதிர்த்தார்கள். இந்தியாவிலே இந்துத்துவத்தையும், இந்தியாவையும் இந்தி மொழியையும் கடுமையாக எதிர்த்தவர்கள் தமிழர்கள் அதனால் தான் 7 தமிழர்களை தூக்கிலிட துடிக்கிறார்கள். 

* இப்படியே இந்துத்துவ மனப்பான்மையோடு மரணதண்டனையை இந்தியா நிறைவேற்றுமானால் இந்தியா துண்டு துண்டாய் உடையும் என்பதை எச்சரிக்கிறேன். 

* குற்றங்கள் குறைய மரணதண்டனை தீர்வல்ல. ஏற்றத்தாழ்வுகளை களைந்தாலே குற்றங்கள் குறையும். ஏற்றத்தாழ்வுகளை சாதி, மதங்களை களைய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக