புதன், 10 ஏப்ரல், 2013

பார்ப்பானிடம் பொறிக்குத் திங்கும் கைகூலிகள் வர்றாங்க ... சொம்பை எடுத்து உள்ளே வைங்க ...

தமிழீழத்திற்காக போராடிய மாணவப் போராளிகளை உச்சிமுகந்து கொண்டாடும் ஊடக மற்றும் தமிழீழ விரும்பிகளே ..! மாணவப் போராட்டத்தின் பின் அரசியலை அறியாத மாணவப் போராளிகளே ..!  

கல்லூரி மாணவர்களின் போராட்டம் தொடங்கிய நாள்முதல் இன்றுவரை என்னால் முடிந்தவரை அவர்களுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறேன். உங்களோடு மட்டுமில்லை எல்லோரோடும் என்னால் வரிக்கு, வரி என்னால் முரண்பட முடியும்,  ஆனால் முரண்படுவது என் நோக்கமல்ல. உங்களோடும் இணைந்தே பயணிக்க விரும்புகிறேன். அதனால் தான் எங்கள் குடிசைகளை கொளுத்தி, அதிலே கொண்டாட்டம் அரங்கேற்றும் சாதியவாதிகளுடனும் தமிழ்தேசிய களத்தில் கை கோர்த்து நிற்கிறோம். தமிழீழ விடுதலைக்காக நீங்கள் (மாணவர்கள்) மூட்டிய பெரு நெருப்பு யாருக்கு அச்சத்தை உண்டாக்கியதோ இல்லையோ பார்ப்பன கைகூலிகளான சாதி தமிழ்தேசியவாதிகளுக்கும்    பார்ப்பன ஊடகங்களுக்கும்  கொதிப்பை உண்டாக்கியது. அதனால் தான் மாணவர்களின் போராட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டு கொண்டாடினார்கள். அவர்கள் உங்களை கொண்டாடி கொண்டே உங்களின் இலக்கை மாற்றி அமைத்தார்கள் என்பது தான் பொய்யின் கலப்பே இல்லாத உண்மை. இந்திய அரசையும், ஐ. நா மன்றத்தையும் நோக்கிய மாணவர்களின்  போராட்டத்தை மடைமாற்றி தி.மு.க.வுக்கும், டெசொவுக்கும் எதிரான இயக்கமாக உங்களை கட்டமைக்க துடித்தார்கள். அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டிருக்கிறார்கள். அதன் நீட்சி தான் 14.04.2013 தேதியிட்ட "குமுதம் ரிப்போர்டர்" என்ற பார்ப்பன இதழின் "சிதைந்ததா மாணவர் ஒற்றுமை?" என்ற தலைப்பிலான கட்டுரை.

மாணவர்கள் ஆரம்பம் தொட்டே எங்கள் போராட்டத்தில் அரசியல் கலப்பில்லை, எந்த அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவற்ற போராட்டம் என்பதை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அந்த பார்ப்பன இதழ் ஜோ.பிரிட்டோவை பாதிரியார் ஒருவர் இயக்குவதாக சொல்லி  அதனால் தான் அவர் சரத்குமாருக்கு ஆதரவாக நடிகர் சங்க உண்ணாவிரதத்துக்கு சென்றார் என்று அதன் மூலம் மறைமுகமாக சொல்லி இருக்கிறார்கள். திவ்யா தமிழ்நாடு மக்கள் கட்சியை சேர்ந்தவர் என்றும், முருகானந்தம் சாதி அமைப்புகளின் கைப்பாவை என்றும், பூங்கா பாக்கியராஜ் அவர்கள் தி.மு.க வை சேர்ந்தவர் சொல்லி இருக்கிறார்கள். பூங்கா பாக்கியராஜ் அவர்களை தி.மு.க. காரர் என்று சொல்லி அடுத்த பத்தியிலே அவர் கூடு இயக்கம் நடத்துவதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.இது முரண்பட்ட தகவல். பூங்கா பாக்கியராஜ் கூடு இயக்கம் என்ற அமைப்பை நடத்துவது உண்மை. ஆனால் அவரை தி.மு.க. காரர் என்று அப்பட்டமான பொய்யை சொல்லி தி.மு.க.மீதான தம் அரிப்பை சொரிந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த கட்டுரைக்கு  துணை தலைப்பாக  " கொண்டாட்டத்தில் தி.மு.க." என்றும்   இட்டு இருக்கிறார்கள். இதன் மூலம்  பூங்கா பாகியராஜ் அவர்களை மாணவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதையும் மறைமுகமாக சொல்லி இருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் "குமுதம் ரிப்போர்டர்" இதழ், 4 ஆம் தேதி தாயகத்தில் நடந்த ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க செல்லவே இல்லை என்பதுதான். ஒருவேளை அவர்கள் சென்றிருந்தால் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஒருப் புகைப்படம் கூட எடுக்கவே இல்லையா என்ன? சம்பந்தமே இல்லாமல் மூன்று புகைப்படங்களை போடவேண்டியதன் அவசியம் என்ன? அந்த கட்டுரை மூலம் அவர்கள் சொல்ல வருவது என்ன? இதை தான் மாணவர்களின்  கவனத்திற்கும்  மற்ற தமிழ்தேசிய விரும்பிகளின்  கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன்...

அவர்களின் கயமைத்தனமான நோக்கங்கள் ஏராளாம் அதில் முக்கியமானதை மட்டுமே கூற விரும்புகிறேன். அதாவது...

(1) கூடு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் என்ற முறையில் பூங்கா.பாக்கியராஜ் அவர்களை பழி தீர்த்து கொள்ள வேண்டும்.

(2) தமிழகம் முழுக்க உள்ள கல்லூரி மாணவர்கள், சட்ட கல்லூரி மாணவர்களை புறக்கணிக்க வேண்டும்.

(3) தமிழகம் முழுக்க உள்ள கல்லூரி மாணவர்கள் ஓரணியில் திரளுவதை அவர்கள் விரும்பவில்லை.

(4) தமிழகம் முழுக்க உள்ள கல்லூரி மாணவர்களுக்கு பொது எதிரியாக தி.மு.க.வை உருவாக்க வேண்டும்.

இதுதான் அவர்களின் நோக்கம்... காரணம்....

(1) பிப்ரவரி 16 ஆம் தேதி "குமுதம் ரிப்போர்ட்டர்" இதழில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களோடு நடிகை குஷ்புவை அன்னை மணியம்மை போல் சித்தரித்து "இன்னொரு மணியம்மை" என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு இருந்தார்கள். அதை கண்டித்து, கூடு இயக்கம் சார்பில் கண்டன அறிக்கை ஒன்றை பூங்கா பாக்யராஜ் அவர்கள் வெளியிட்டார். அது "முரசொலி"யில் வெளிவந்தது  . சென்னை மற்றும் அரக்கோணம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் "குமுதம் ரிப்போர்ட்டர்" இதழை கண்டித்து நோட்டிஸ் ஒட்டப்பட்டது. அதற்காக இன்றைக்கு பழிவாங்கும் நோக்கிலே அக்கட்டுரை வெளியிடப்பட்டிருக்கலாம். அதனால் தான் பூங்கா பாக்யராஜ் அவர்களை தி.மு.க.வை சேர்ந்தவர் என்றும் கதை கட்டிவிட்டு இருக்கிறார்கள்.

(2) லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் தொடங்கிய போது சில தமிழ்தேசிய அமைப்புகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்கள். என்ன ஆதாரம் என்றால் " லயோலா கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு அருகில் உண்ணாவிரதத்தை தொடங்கிய முதல் நாளே காலை 10.00 மணிக்கு  தொடங்கியதும் அதை கேள்விப்பட்டு சரியாக 10.20 மணிக்கு பூங்கா பாக்கியராஜ் அவர்கள் அங்கெ சென்று இருக்கிறார். அப்போது மாணவர்களிடத்தில் "உங்கள் போராட்டத்தோடு நாங்களும் கலந்து கொள்கிறோம். எங்கள் மாணவர்களையும் அழைத்து வருகிறேன். நாம் இதை பெரிய அளவில் செய்வோம்"  என்று சொன்னமைக்கு மாணவர்கள், அவர்களுக்கு பின்னால் அமர்ந்திருந்த மே - 17 நிர்வாகி ஒருவரிடத்தில் ஆலோசனை கேட்டு அதை மறுத்து இருக்கிறார்கள். உண்மையிலே மாணவர்களின் போராட்டத்தை விரிவுபடுத்த அவர்கள் விரும்பவில்லை என்பது தான் உண்மை.  ஆனால் அவர்களே எதிர்பார்க்காத அரசின் நடவடிக்கையில் லயோலா கல்லூரி மாணவர்களை கைது செய்து பின்பு அது தமிழகம் முழுக்க பரவத் தொடங்கிய வேளையில் அது அவர்களின் கட்டுபாட்டை மீறி சென்றது. குறிப்பாக சட்ட கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பங்கெடுக்கவே அவர்களை தம் வயப்படுத்த சில தமிழ்தேசிய அமைப்புகளால் முடியாமல் போகவே போராட்டத்தை முடக்கும் வேளையிலும் இறங்கினார்கள். எங்கே போராட்டம் முழுக்க, முழுக்க சட்டக்கல்லூரி மாணவர்கள் கையில் சென்றுவிடுமோ என்று அஞ்சிய "பார்ப்பனர்களிடம் பொறிக்கித் தின்னும் போலி உணர்வாளர்கள்" போராட்டம் பிசுபிசுக்கிறது என்றும், அவர்களின் ஆதரவு மாணவர்களை வைத்து "நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வேறுவடிவில் தொடர்வோம் என்றும்   செய்தி வெளியிட செய்தார்கள். இதன் ஒருபகுதி தான் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திவ்யா "நாங்கள் போராட்டத்தை வேறு வடிவில் தொடர்வோம் என்று அறிக்கை வெளியிட்ட பின்பும் இரண்டு நாட்கள் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். பூங்கா பாக்யராஜ் தலைமையில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்கள். ஒரு கட்டத்தில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களை ஊடகங்கள் புறக்கணிக்கவும் செய்திருக்கிறார்கள். அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் என்னிடம் கண்ணீரோடு  பதிவு செய்த வரிகள் இது... "நாங்கள் உயிரை வெறுத்து, உணர்வோடு போராடிக் கொண்டிருக்கிறோம், ஆனால் யாரோ போராட்டம் முடிந்துவிட்டது என்று அறிவிக்கிறார்கள். உண்ணாவிரததத்தை முடித்து பின்பும் இரண்டு நாட்களுக்கு மலம் கழிக்கவும், சிறுநீர் கழிக்கவும் சிரமப்பட்டேன்" என்று. அந்த வரிகளில் இருந்து இன்னமும் என்னால் மீள முடியவில்லை. அதன் நீட்சி தான் தாயகத்தில் நடந்த அனைத்து சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பை, அனைத்து கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு என்று புனைத்து, மற்ற அனைத்து கூட்டமைப்புகளையும் கலைத்து விட்டு அதற்கு "டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு" என்று பெயர் வைக்க டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் முருகானந்தம் வலியுறுத்தியதாக கொஞ்சம் கூட அறிவே இல்லாமல் எழுதி இருக்கிறார்கள். அனைத்து கல்லூரி மாணவர்களை (பொறியியல், கலை, அறிவியல், தொழில்நுட்பம், இன்னபிற) ஒன்றிணைத்து "டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு" என்று பெயர் வைக்க எந்த முட்டாளாவது  சொல்லுவானா? என்பதை நீங்களே சிந்தித்து கொள்ளுங்கள்.

(3) ஒருவேளை மேற்சொன்ன எல்லா கருத்து வேறுபாடுகளையும் களைந்து விட்டு அனைத்து கல்லூரி மாணவர்களும் ஒன்றிணைந்து விட்டால் பிறகு அ.தி.மு.க. வுக்கு சொம்பு தூக்க முடியாதல்லவா? அதனால் தான் மாணவர்களை ஒன்று சேரவிடாமல் தடுக்க இப்படிப்பட்ட கேடு கேட்ட புனைவு கதைகளை எல்லாம் அவிழ்த்து விடுகிறார்கள்.

(4) தமிழக மாணவர்களின் போராட்டத்தில் தி.மு.க.வுக்கு எதிரான வாசகங்களோ, டெசொவுக்கு எதிரான முழக்கங்களோ முதலில் இடம்பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் காங்கிரசுக்கு எதிரான முழக்கங்கள் கூட இல்லை. காங்கிரஸ் முன்னாள் தமிழக தலைவர் தங்கபாலு மாணவர்களின் எதிர்ப்புக்கு உள்ளானார். அன்று நானும் அங்குதான் இருந்தேன். நானும் தங்கபாலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். பிறகு தங்கபாலு கேப்டன் டிவி க்கு பேட்டிக் கொடுக்கும் போது "நானும் தமிழன் தான், மாணவர்கள் என்னை வரவேற்கிறார்கள், ஆனால் சில சமூக விரோதிகள் தான் என்னை தடுக்கிறார்கள்" என்று கூறினார். உடனே கேப்டன் டிவி செய்தியாளர் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களிடம் செல்கிறார். நானும் பின்தொடர்ந்து சென்றேன்.  நீங்கள் அவரை (தங்கபாலுவை) வரவேற்பதாக அவர் சொல்கிறார்" நீங்கள் வரவேற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? கேட்கிறார். அதற்கு ஜோ. பிரிட்டோ பதில் சொல்கிறார் " இனி தான் நங்கள் பேசி முடிவு எடுக்க வேண்டும்" என்று. நான் அதிர்ந்து போனேன். மாணவர்கள் எதிர்ப்பதாக சொல்லித்தானே வெளியில் எதிர்ப்பு நடக்கிறது. நாமும் எதிர்த்தோமோ என்று. அந்த இடத்திலே மாணவர்களும் முட்டாளாக்கப் பட்டார்கள், அவர்களுக்காக சென்ற நாங்களும் முட்டாளாக்கப் பட்டோம். இப்படி சென்ற போராட்டத்தை தி.மு.க.வுக்கு எதிராகவும் டெசொவுக்கு எதிராகவும் மாற்றியவர்கள் யார்? என்பதற்கு பதில் தான் பார்ப்பனர்களிடம் பொறிக்கித் தின்னும் போலி உணர்வாளர்கள்.

குமுதம் ரிப்போர்டர் இதழின் கட்டுரை குறித்து, அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவரும், கூடு இயக்க பொது செயலாளரும் ஆன "அசோக்" அவர்களிடம் கருத்து கேட்டேன். அவர் இதை வேறு வடிவில் பார்ப்பதாக சொன்னார்." அதாவது நிலவுமொழி யின் கருத்தான " நாங்கள் வெளிநடப்பு செய்யாமல் இருந்திருந்தால் பெரிய அளவில் அவமானப்பட்டிருப்போம்" என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து (ஹைலைட்) காண்பிப்பதன் மூலம் "தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமில்லை, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த படித்த கல்லூரி மாணவர்களும் ஒழுக்க கேடானவர்கள், பெண்களை அடிமைப் படுத்தக் கூடியவர்கள்" என்று நிறுவ முயல்கிறார்கள். இது ஒரு மோசமான பிற்போக்குத்தனம். என்று சீறினார்.

குமுதம் ரிப்போர்டர் இதழின் கட்டுரை குறித்து நிலவுமொழி யிடம் நான் பேசினேன். கட்டுரையில் உங்களின் கருத்தாக வந்திருக்கும் செய்தி உண்மையா என்றேன். ஆமாம்.. என்னை தொலைபேசியில் கேட்டார்கள். நான் தான் சொன்னேன். என்றார். அது தவறாக பயன்படுத்தப் பட்டிருக்கிறதே என்றதற்கு அதைப் பற்றி கவலையில்லை, எங்களை அடிக்க வந்தார்கள், அவமதிப்பு செய்தார்கள் அதனால் எல்லோருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக சொன்னேன் என்றார். மேலும் விரிவான தகவல் வேண்டும் மின்னஞ்சல் செய்யமுடியுமா என்றதற்கு மின்னஞ்சல் செய்கிறேன் என்றவர் அதன் பிறகு தகவல் கொடுக்கவில்லை.

எங்களை அடிக்க வந்தார்கள் என்ற நிலவுமொழி யின் கருத்து குறித்து கருத்தறிய பூங்கா பாக்கியராஜ் அவர்களை தொடர்பு கொண்டேன். அந்த கட்டுரையே முழுக்க, முழுக்க காழ்ப்புணர்ச்சி கொண்டது. நிலவுமொழி யை யாரும் அடிக்க செல்லவில்லை. அப்படி செய்ய நாங்கள் காட்டுமிராண்டிகள் அல்ல. திவ்யாவுக்கு எதிர்ப்பு வந்தது உண்மை. அதற்கு காரணம் அவர்களின் முந்தைய தன்னிச்சையான அறிவிப்புகளுக்காகவே மாணவர்கள் எதிர்ப்பு செய்தார்கள். மேலும் நான் சொன்னதாக குமுதம் ரிப்போர்ட்டரில் வந்திருக்கும் "தமிழ்நாடு மக்கள் கட்சி புறக்கணிப்பதாக சொல்லிவிட்டு செல்லுங்கள்" என்ற கருத்தை நான் சொல்லவே இல்லை. தமிழகம் முழுக்க உள்ள  சட்டக்கல்லூரிமாணவர்களை ஒரே அமைப்பாக ஒருங்கிணைக்க வேண்டும் என்பது தான் அந்த ஒருங்கிணைப்பின் நோக்கமே. அதற்கு தற்போது செயல்பட்டு வரும் சட்டக்கல்லூரி மாணவர்களின் அமைப்புகளை கலைக்கலாம் என்று விவாதித்ததும் உண்மையே. அப்போது திவ்யா " அமைப்புகளை கலைக்க முடியாது, நான் என் கட்சி சொல்வதை தான் கேட்க முடியும்" என்றார். அதற்கு தான் இன்னொரு மாணவர் உங்கள் கட்சி என்றால் தமிழ்நாடு மக்கள் கட்சியா? என்று கேட்டார். அதற்கு தான் நிலவு மொழி கோபப்பட்டு அப்படியானால் நீங்கள் பூங்கா பாக்கியராஜ் தலைமையிலான கூடு இயக்கத்தை சேர்ந்தவர்களா? என்று கேட்டார். இதுதான் அங்கெ நடந்தது. என்று முடித்தார்.

குமுதம் ரிப்போர்டர் இதழில் வெளிவந்திருக்கும் கட்டுரை திட்டமிட்டு பார்ப்பனர்களிடம் பொறிக்கித் தின்னும் போலி உணர்வாளர்களால் பரப்பப்பட்டது என்பது தான் உண்மை. நிலவுமொழி அவர்களிடம் கூட, அவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்திலோ, அல்லது நேரிலோ பேட்டி கேட்கவில்லை. தொலைபேசியில் தான் கேட்டிருக்கிறார்கள். அப்போது கூட அதே இதழில் முருகானந்தம் சொல்லி இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். "சின்ன கருத்து வேறுபாட்டால் அவர்கள் புறக்கணித்து விட்டு சென்றார்கள். இதை பெரிதாக்கி போராட்டத்தை சிதைத்து விடாதீர்கள். நாங்கள் மீண்டும் ஒன்றாக கலந்து பேசி அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம்." என்று தெளிவாக சொல்லி இருக்கிறார். சட்ட கல்லூரி மாணவர்கள் ஒன்றாகவே இருக்க விரும்புகிறார்கள். மீண்டும் போராட தயாராக இருக்கிறார்கள். ஆனால் சில பார்ப்பனர்களிடம் பொறிக்கித் தின்னும் போலி உணர்வாளர்கள் தான் மாணவர்களிடம் வெறுப்பை விதைத்து வருகிறார்கள். இது போராட்ட களத்தில் இருந்து "டாக்டர் அம்பேத்கர் சட்டகல்லூரி மாணவர்களை புறக்கணிக்கும் "சாதி புத்தி" அல்லாமல் வேறு என்ன என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...!

- அங்கனூர் தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக