திங்கள், 25 பிப்ரவரி, 2013

கேள்வி - பதில் !



வெங்கட் : கடந்த முறை தமிழருவி மணியன் அவர்களை நீங்கள் விமர்சித்தீர்கள். ஆனால் தற்போது திருச்சியில் சாதி, மத நல்லிணக்க மாநாடு நடத்தியிருக்கிறாரே இதை வரவேற்கலாமே? ஏன் வரவேற்கவில்லை?

பதில் : தமிழருவி மணியன் அவர்களோடு எனக்கு தனிப்பட்ட முறையில் எவ்வித முரண்பாடும் இல்லை. அவர் செய்யும் நல்ல காரியங்களை நிச்சயமாக வரவேற்பேன். ஆனால் காந்தியின் அஹிம்சை எப்படி எம்மக்களை இம்சித்ததோ, அப்படித்தான் தமிழருவி மணியன் பேசும் தமிழ்தேசியமும். தலித் தலைவர்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு ஆடை அணிவதாக அவர் கூறியதை கடுமையாக விமர்சித்தேன். தற்போது அவர் திருச்சியில் சாதி, மத நல்லிணக்க மாநாடு நடத்தி இருப்பதாக அறிகிறேன்.  மேலும் மாநாட்டில் அவர் பேசும் போது "சாதிகள் இல்லையடா தமிழா!" எனும் தலைப்பில் பேசி இருக்கிறார். அப்படி அவர் பேசும் போது " சாதிகள் சாகாத வரை "தமிழ்ச்சாதி" மேன்மையுறாது. அதனால், முதலில் சாதியை சாகடிக்க வேண்டும். அதற்காக ஆயுதம் தூக்க வேண்டாம். காதல் கலப்புத் திருமணத்தை ஆதரியுங்கள். என்று பேசி இருக்கிறார். இந்த சொல்லாடலிலே தமிழருவி மணியன் அவர்களின் சாதி ஒழிப்பு (?) மனப்பான்மையை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதாவது தமிழர்களுக்கு தமிழ் என்பது "இன அடையாளமே ஒழிய சாதி அல்ல". சாதியை ஒழிக்க வேண்டும் என்று விரும்புகிற (?) மணியன் அவர்கள் ஏன் புதிதாக தமிழ்ச்சாதியை உருவாக்க விரும்புகிறார்? மேலும் "சாதி மறுப்பு திருமணம்" என்று கூட சொல்ல மனமில்லாத மணியன் அவர்கள் "காதல் கலப்பு திருமணம்" என்று சொல்கிறார். பொது பண்புகளில் வேறுபாடு கொண்ட இரு இனங்கள் ஒன்றோடு ஒன்று உறவை ஏற்ப்படுத்திக் கொள்ளும் போதுதான் கலப்பு ஏற்படுகிறது. மணியன் அவர்களின் பார்வையில் சாதி என்பது இனமாகவும், மொழி என்பது சாதியாகவும் தெரிகிறது போலும். இந்த மாநாடு அந்த கால "சின்னகவுண்டர்" "தேவர் மகன்" திரைப்படங்களை போன்றதே ஒழிய, வேறேதும் அல்ல ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக