உன்னுடைய குடிசைகள்
கொளுத்தப்படுவதும்,உன்னுடைய
குரல்வளை நசுக்கப்படுவதும்
உன்னாலே; உனக்குள் இருக்கும்
உணர்வுகளை உணராத, ஆதிக்க
வர்க்கத்திற்கு உணர்த்தாத
அலட்சியத்தாலே;
எரிகிற குடிசை எல்லாம்
சேரியாய் இருக்கிறது;
அழுது சிவக்கின்ற நிலமெல்லாம்
சேரியாய் இருக்கிறது;
அழுது குமுறுவதும் பின் எரிந்த
சாம்பல் முன் புலம்புவதும்
உன் வாடிக்கையானது !
அதுவே ஆத்துக்க வர்க்கத்திற்கு
வேடிக்கையானது
உன் உயிருக்கு உத்தரவாதம்
இல்லையேல் வைத்துக்கொள்
இடுப்பில் கத்தி !
உன் குடிசையை கொளுத்த
ஆதிக்க வர்க்கம் தீப்பந்தம்
தூக்குமானால் உன்னிடம்
இல்லையா ஒரு தீக்குச்சி?
- அங்கனூர் தமிழன் வேலு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக