செவ்வாய், 27 நவம்பர், 2012

இல்லையா தீக்குச்சி?


உன்னுடைய குடிசைகள்  
கொளுத்தப்படுவதும்,உன்னுடைய 
குரல்வளை  நசுக்கப்படுவதும்
உன்னாலே; உனக்குள் இருக்கும் 
உணர்வுகளை உணராத, ஆதிக்க 
வர்க்கத்திற்கு உணர்த்தாத 
அலட்சியத்தாலே; 

எரிகிற குடிசை எல்லாம் 
சேரியாய் இருக்கிறது; 
அழுது சிவக்கின்ற நிலமெல்லாம்  
சேரியாய் இருக்கிறது;
அழுது குமுறுவதும்  பின் எரிந்த 
சாம்பல் முன் புலம்புவதும் 
உன் வாடிக்கையானது !
அதுவே ஆத்துக்க வர்க்கத்திற்கு 
வேடிக்கையானது 

உன் உயிருக்கு உத்தரவாதம் 
இல்லையேல் வைத்துக்கொள்
இடுப்பில் கத்தி ! 
உன் குடிசையை கொளுத்த 
ஆதிக்க வர்க்கம் தீப்பந்தம் 
தூக்குமானால் உன்னிடம் 
இல்லையா ஒரு தீக்குச்சி?

- அங்கனூர் தமிழன் வேலு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக