ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

இலை மலர்ந்தாச்சு! ஈழம் என்னவாச்சு?


இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று
சொல்லித்தானே வாக்கு கேட்டோம்
இலை மலர்ந்தாச்சு!  ஈழம் என்னவாச்சு?

சினங்கொண்ட புலிப்படை
தலைவனின் தம்பியடா நான்
என்று சொல்லிக்கொண்டே
மாதவளின் வழக்கிற்கு அஞ்சி
சீலையிலே ஒளிந்து கொண்ட சீமான்களே!

உன் வீட்டில் நுழைய உனக்கேது உரிமை
புதுக்கோட்டை இனி என்க்கோட்டை
என்று சொன்னாளே தலைவி அதைக்கேட்டு
வக்கத்து, வாய்பொத்தி நிற்கும் பாண்டியர்களே!

சங்கரன்கோவில் கிடையாது என்றதும்
போயசு தோட்டத்தில் குடியேறி தனிப்பெரும்
தலைவியாம் தங்கத் தாரகையின் நல்லாசியோடு
மதுரை திருமங்கல வட்ட செயலாளராக
பதவியேற்று பம்பரமாய் சுழன்றீரே !

ஆனாலும் நானோ கதாநாயகி
தேவை கதாநாயகன்
நீ எதற்கு வெறும் நாயகன்
வெளியேறு என்று சொன்னதால்
தடுமாறி நின்றீர்;   தடம் மாறி நின்றீர்  !

தாயக விடுதலைக்கு தன்னுயிரை
நீத்தானே பாலகன் பாலச்சந்திரன் அவன்
வீரம் போற்றும் மாவீரர்கள் நாள் !
வணக்கம் சொல்வதும், இரங்கல் சொல்வதும்
தேசத்துரோகம் என்றாளே தலைவி
அதை கேட்டு வாய்மூடித்தான் கிடந்தோம்
நீங்கள் வக்கத்து நின்றீர்கள்....
நாங்கள் வாக்களித்து நின்றோம் !

பழையது போயாச்சு இனி தலைவி
ஈழத்தாயாக உருமாறியாச்சு  - ஈழம்
மலருமே ! எங்கள் வாழ்வு மலருமே !
என்று சொன்னாரே புரட்சிப்புயல்
காந்திய மண்ணில் காந்தியப் போராட்டம்
செய்தானே செந்தூரன் அவனை
புழலிலே அடைத்தாளே தலைவி
ஒருவேளை ஈழம் புழலில் இருக்கோ?

புலி புலி என்று வாய்ச்சவடால் அடிக்கும்
நெடுமரங்களே, இங்கே தமிழனுக்கும்
விடுதலை இல்லை;  தலித்துக்கும் விடுதலை
இல்லை ! ஆனால் போயசு தோட்டம் மட்டும்
விடியலாய் வரவேற்க, விழுந்தோமே
புதைக் குழியில் சதி வலையில்
விழுந்தது தமிழன் !
வாழ்வது தமிழனா?
தங்க தாரகையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக