புதன், 19 செப்டம்பர், 2012

நெருப்பாய் எழுடா தமிழா!!!


நெருப்பாய் எழுடா தமிழா!!!
-----------------------------------------------------------------------
திரையரங்க மோகத்தில் கிடந்தோம் 
திரும்ப திரும்ப அடிவாங்கி அழுதோம் 
வன்னி தலைவனின் கரங்கள் சோர்ந்தன
அதனால் வன்னி நிலமெல்லாம்  தமிழர் பிணம் 
உலக நெஞ்சங்கள் துடிக்காத  நாதியற்ற பிணம் 
ஐயோ என்று அழுதோம் அதற்க்கு மேல் செய்ய 
ஒன்றுமில்லை துடித்தோம் !!

ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்று 
நம்பினோம்  மாறவில்லை காட்சி !
மானம்  முறுக்குகிறது மனம்  துடிக்கிறது 
என்ன செய்வது? உலகப் படைகள் எல்லாம் 
ஒன்றுபட்டது என் சொந்தத்தை அழிக்க !!! 
அன்றும் ஒன்று சேராதது என் தமிழ்நாட்டு 
சொந்தங்கள்!! சேரவிடாமல் தடுத்தது எது? 
அது ஒரு பெரிய துரோக கதை!! 
அதை பேசினால் நெருப்பாய்  
எழுந்தவனின் வரலாறு மறைந்துவிடும்  

வீதிக்கு  ஒரு தலைவன் ! சாதிக்கு ஒரு 
தலைவன் !! என் இனத்தை காக்கும் 
இனமான  தலைவன் பின்னால் சேராமல்
போனவர்கள் பொங்கல் சாப்பிட்டு 
பொங்கல் சமிக்க பொதுக்கூட்டம் போட்டு 
நீதான் காரணம் என்றார்கள்!
மறைமலை நகரில் தன்னுயிரை சித்தம் 
செய்ய துடித்தான் தொல்காப்பியன் பிள்ளை  
அன்றைக்கு காஞ்சிக்கு வராதவர்கள் இன்று 
சாஞ்சிக்கு சென்று இருக்கிறார்கள்
நாம் தூற்றவில்லை உணர்வு வந்ததே 
என்று போற்றுகிறோம் !  

உண்மை உனக்கு தெரியும் முத்துக்குமாரா!!
அதனால் தான் நீ சொன்னாய் அண்ணன் 
ஏன் சாக வேண்டும் நான் சாகிறேன் என்று

துரோகத்தால்  விழுந்து நெருப்பில் விழும்  
சரீரம் உன்னோடு முடியும் என்றுதான் 
நினைத்தேன் திரும்பி பார்க்கிறேன் 
கடலூர், சிதம்பரம், சீர்காழி, ஜெயம்கொண்டம் 
குருவிக்குளம், புதுக்கோட்டை  ஆங்காங்கே 
நெருப்பை தின்றார்கள்! வெளிச்சமாய் எறிந்தார்கள்!
அத்தோடும் நிற்கவில்லை நெருப்பை முத்தமிட்டு 
மானுடத்தையே மணந்து கொண்டாள் 
என் தங்கை செங்கொடி - அங்கேயும்   
நூறடி தள்ளி நிற்கிறேன் ஆனாலும் 
என் ஆதரவை தருகிறேன்  என்றுதானே  
சொன்னான் தொல்காப்பியன் பிள்ளை   
யாருக்கும் காதில் விழவில்லை என்ன செய்வது?  
அதனால் இன்று விஜயராஜ் 
தீயை முத்தமிட்டுக் 
கொண்டு இருக்கிறார் 
நெருப்பில் வீழ்ந்தவர்கள் வீரர்கள் 
அந்த வெளிச்சத்திலும் 
விழிக்காதவர்கள் கோழைகள் 
நெருப்பாய் எழுடா தமிழா!!
நெருப்பில் வீழ்ந்துவிடாதே தமிழா !!

நெருப்பை முத்தமிட்ட தீரர்களே 
நீங்கள் கொடுத்த வெளிச்சம் போதும்
நெருப்பாய் எழுவோம் !! 
தமிழ் ஈழம் வெல்வோம் !!

தியாகத்தை போற்றி வீரவணக்கத்துடன்...
அங்கனூர் தமிழன்வேலு... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக